states

கடும் நெருக்கடிக்குள் சிக்கப்போகும் தொழில் வணிகத்துறை - பொதுமக்கள்

மதுரை,ஜூன் 9-  வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி   0.50 சதவீதம் அதிகரித்திருப் பது உற்பத்தியையும், தொழில் வணிக முத லீட்டையும் பெரிதும் பாதிக்கும் என்று தெரி வித்துள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், கடும் நெருக்கடிக்குள் சிக்கப்போ கும் தொழில் வணிகத்துறை மற்றும் பொது மக்களை மீட்க ஒன்றிய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கைகைளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.   இதுகுறித்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மே மாதம் மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீத மாக உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த மாதம் நடைபெற்ற நிதிக்  கொள்கை கூட்டத்தில் 0.50 சதவீத வட்டியை  மீண்டும் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வால் குறுகிய கால கடன் களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்; குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் மற்றும் தங்க நகைக் கடன் போன்ற வற்றிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை கூடுதலாகும். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடி, பண வீக்கத்தினால் அவதிப்படும் தொழில், வணிகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் கூடுதல் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படுவர்.

வளர்ச்சிக்கு சவாலான பணவீக்கம்

நம் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றது. உக்ரைன்-ரஷ்யா போர், உலக வர்த்தக விநியோக பாதிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு  தடையாக உள்ளது. மேலும் பணவீக்கம் ரிசர்வ்  வங்கியின் இலக்கினை விட தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக சற்று மீண்டு வரும் தொழில், வணிக சந்தைகளில் பொருளாதார தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, அதன் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய சவாலாக பணவீக்கம் உள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி காரணம் கூறினாலும், இந்த நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி வெகுவாக அதிகரித்து பணப்புழக்கம் குறைந்து, தொழில் வணிகத் துறையினரும், பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளனரே தவிர விலைவாசியும், பணவீக்கமும் குறைந்ததாக ஆதாரப்பூர்வ மாக நிருபிக்கப்படவில்லை.  மேலும் இந்த வட்டி விகித உயர்வு பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு  மியூச்சுவல் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி விகிதம் குறைந்து பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு 77.69 ஆக அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு பாதகம்

பொருட்களின் விலையேற்றத்திற்கு அவற்றின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியே முக்கியக் காரணம். எனவே, பணவீக்கம் குறையவும், உற்பத்திப் பெருகி பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், தொழில் துறை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கத் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான தொழில்கள் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி களுக்கான கடன்கள் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் ரிசர்வ் வங்கி தற்போது அதி கரித்திருப்பதின் காரணமாக வங்கிகள் தொழில் துறையினருக்கு அளிக்கும் கடன் ளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்; எனவே தொழில் துறையின் உற்பத்திச் செலவு மேலும் அதிகரிக்கும். பணப்புழக்கம் குறைந்தால் உற்பத்திப் பொருட்களை வாங்குவது குறைந்து தொழில் வணிகத் துறை யில் பிரச்சனைகள் மேலும் தீவிரமடையும்.  எனவே, பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வும், அதனைக் குறைத்திடவும் தொழில் வணிகத் துறையினர் தொடர்ந்து சந்தித்து  வரும் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, கட்டமைப்பு வசதி குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தீர்த்திட ஒன்றிய அரசு உடனடியாக தீவிர நட வடிக்கைகளை எடுத்திட வேண்டியது மிகவும்  அவசியம். வங்கிகளுக்கு அளித்திடும் கடன் களுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி தற்போது 0.50 சதவீதம் அதிகரித்திருப்பது நமது பொருளாதார வளர்ச்சிக்குப் பாதக மான விளைவுகளையே ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.