states

மதுரை மெட்ரோ ரயில் “சாத்தியக் கூறு அறிக்கை” மே மாதம் வெளியாகும்

மதுரை,ஏப்.12- மதுரைக்கு மகிழ்வான செய்தியாக மதுரை மெட்ரோ ரயில்  “சாத்தியக் கூறு அறிக்கை” மே மாதம் வெளியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அனுப்பிய  கடிதத்திற்கு  சென்னை மெட்ரோ  ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 19.01.2022 அன்று மதுரை மெட்ரோ ரயில் திட்ட  பணிகள் பற்றி எழுதி இருந்த கடிதத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.எம்.கிருஷ்ணன்  கடித எண் CMRL /629/1/DFR for Madurai MRTS /2021/ 05.04.2021 தேதியிட்ட பதிலை அளித்துள்ளார்.  “மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் பற்றிய உங்கள் 19.01.2022 கடிதம் தொடர்பாக இப் பதில்  தரப்படுகிறது.  மதுரை, திருச்சி, திருநெல் வேலி, சேலம் ஆகிய இரண்டாம் தட்டு  நகரங்களுக்கு மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வரு வதற்கான “சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை” க்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. “மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான “சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை” தயாரிப்பதற்கான  டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே விடுக்கப்பட்டு அப்பணி “பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (கன்சல்டன்சி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடந்தேறி வருகிறது. இறுதி சாத்தியக் கூறு அறிக்கை மே 2022 இல் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது.” மதுரை மக்களுக்கு நல்ல செய்தி. விரைவில் இப்பணி மேற்கொள்ளப்பட என்னு டைய இடையறா முயற்சிகள் தொடரும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.