வேலூர், மே 6 - தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட ஸ்தாபக தலைவருமான தோழர் கே.ஆர்.சுந்தரம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் 18 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டியும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் தாராபடவேடு பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நூற்றாண்டு நிகழ்ச்சியில் மூத்த தோழர்கள் தங்கவேலு, என்.பிச்சுமணி ஆகியோர் கே.ஆர்.சுந்தரத்தின் அளப்பரிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்
. கே.ஆர்.சுந்தரம் நேர்மையான அரசியலின் அடை யாளம், தியாகத்தின் உருவம், வேலூர் மாவட்டத்தின் மகத்தான தலைவர் என்று அவர்கள் குறிப்பிட்டனர். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க அவரது நூற்றாண்டு விழாவில் சபதமேற்போம் என்று கூறினர். சுதந்திரப் போராட்ட வீரர், தொழிற் சங்கத் தலைவர், பொதுவுடமை இயக்கத் தலைவர், மக்கள் பிரதிநிதி என்று பல பரிமாணம் கொண்டவராக தோழர் கே.ஆர்.சுந்தரம் திகழ்ந்தார். அவர் வாழ்வில் கணிசமான பகுதி சிறை, தலைமறைவு என கழிந்தது.எளிமையான வாழ்க்கைக்கு சொந்தமான அவர் குடியாத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை செயல்பட்டார். காட்பாடி அருகே உள்ள தாராபடவேடு ஊராட்சி மன்றத் தலைவராக 15 ஆண்டுகள் செயல்பட்டார் என்றும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ.ஏகலைவன், கே.ஜெ.சீனிவாசன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவர்த்தனன், பார்த்திபன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு அலுவலகம் தோழர் கே.ஆர். சுந்தரம் நினைவு தினத்தையொட்டி சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமையில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், நிர்வாகிகள் வி.நாகேந்திரன், எம்.காசி, எஸ்.செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.