சென்னை, மே 28- மதவாத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாப் போம் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. “தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி - வியர்வையைக் கொட்டியும், பண்படுத்தி வைத்துள்ள தமிழ் நிலத்தில், சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்; மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத - அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை வெற்றிகர மாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தி, முதல்வர் தலைவர் மு.க. ஸ்டாலினின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம் எனக் மாவட்டச் செய லாளர்கள் - பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம் ஒருமன தாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கிறது!” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.