states

தனியார் உர வியாபாரிகள் மோசடி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

சென்னை,ஜூன் 3- செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசு தீர்மானித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் உர வியாபாரிகளின் மோசடி, முறைகேடு  குறித்து உயர்மட்ட  விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதுமான உரம் கிடைக்காமலும், உரத்துடன் இணை பொருட்கள் கட்டாயம் வாங்கினால் தான் தருவோம் என்று தனியார் உரக்கடை வியாபாரிகள் நிபந்தனை விதிப்பதும், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசு தீர்மானித்த விலையை விட கூடுதல்  விலைக்கு விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, மே 19 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தோம். கடைகளின் பெயர்களை தெரிவிக்குமாறு கூறினார். முறைகேட்டில் ஈடுபடும்கடைக்காரர்களின் பெயரை எழுதிக் கொடுத்த பிறகும் மாவட்ட நிர்வாகம் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறை கேடுகளுக்கு வேளாண்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். புகார் கொடுத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மீது உரவியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் பொய்ப்புகார் கொடுத்துள்ளனர். நடை பெற்றுள்ள உர மோசடி, ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் கடந்த  ஐந்து நாட்களாக ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு, தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நட வடிக்கை எடுப்பதுடன் நடைபெற்றுள்ள மோசடி, முறைகேடு குறித்து உயரதிகாரி களின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.