சென்னை, ஜூலை 11- விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் கோரிக்கைக ளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் ஜூலை 11 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துப் பேசினர். இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண் முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஜூலை 11 திங்களன்று காலை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் பெ.சண்முகம், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநி லச் செயலாளர் சாமி.நடரா ஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன், குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில தலை வர் எல்.சிவலிங்கம் ஆகியோர் சந்தித்து விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து பேசினர்.
நெல் கொள்முதல் அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், தனியாரிடம் விடக்கூடாது என்றும், குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு செய்வதற்குரிய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும், கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க ஏதுவாக, பங்கீட்டுமுறை சட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. நெல் கொள்முதல் செய்வ தில் தனியாரை ஈடுபடுத்தும் யோசனை இல்லை என்றும் அரசு கொள்முதல் தொடரும் என்றும், பயிர்க்காப்பீடு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டம் 2006 அமலாக்கம் மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. எனவே இச்சட்டத்தை அமல் படுத்துவதற்கென்று சிறப்பு கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும். குறுமன்ஸ், கொண்டா ரெட்டீஸ், மலைக்குறவன் ஆகிய பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்கப்படாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொண்டாரெட்டி பழங்குடியி னத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது இனத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாத துய ரத்தில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். அவருடைய துணைவியாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியி லிருந்து உதவிட வேண்டும்.
கோயில் நிலங்களில் குடியி ருப்பவர்களுக்கான வாடகையை குறைக்கவும், குடியிருக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றாமல் வாடகை தாரர்களாக அங்கீகரித்து முறைப் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரி வித்தார். இவ்வாறு அதில் கூறியுள் ளார்.