states

போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க கோட்டை நோக்கி சிஐடியு பேரணி

சென்னை, ஏப்.25- போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சென்னையில் திங்களன்று (ஏப்.25) கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் பணம் ரூ.11 ஆயி ரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும் உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யும் நடைபெற்ற இந்தப் பேரணியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். பேரணி பல்லவன் இல்லம் அருகில் இருந்து புறப்பட்ட வுடன் காவல்துறையினர் அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் அதே இடத்தில் கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது.  இப்போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவை யில் உள்ளன. கடந்த ஆட்சி அதைப்பற்றி கவ லைப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வில்லை. இது தொழிலாளர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியுள்ளது. போக்கு வரத்துக் கழகங்கள் மிகச்சிறப்பாக செயல்படு கின்றன. ஊழியர்கள் இரவும், பகலும் உழைக்கி றார்கள். போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் என்று தெரிந்தே வருமானமற்ற வழித்தடங் களில் 10 ஆயிரம் பேருந்துகளை இயக்கு கின்றன. இவை தமிழகத்திற்கும், தமிழக பொரு ளாதாரத்திற்கும் அவசியம்.

உலகத்தில் 10 நாடுகளில் பொது போக்கு வரத்து அனைவருக்கும் இலவசம். போக்கு வரத்து துறைக்கு அரசு மானியம் வழங்கு வதால்தான் பல மாநிலங்களை விட தமிழகம் முன்னேறியுள்ளது. மானியம் வழங்குவதால் ஏற்படக்கூடிய இழப்பை ‘நஷ்டம்’ என்று  பார்க்கக் கூடாது. பெண்களுக்கு, மாணவர் களுக்கு வழங்கப்படும் இலவசம் மூலம் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டக் கூடிய முறையில் அரசு நிதி வழங்கி இருந்தால் எந்த நஷ்ட மும் ஏற்பட்டிருக்காது. எனவே அரசு வரு மானத்திற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்கினால் பிரச்சனை களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

ஓய்வுக்கால பலன்கள்

கடந்த 15 மாதங்களாக ஓய்வு பெற்றவர் களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை வழங்காமல் ஆட்சியாளர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 11,000 கோடி நிர்வாகங்களால் செலவு செய்யப்பட்டி ருக்கிறது. இதனால் வைப்பு நிதியில் இருந்து, சொசைட்டியில் இருந்து கடன் பெற முடிய வில்லை. சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் கடுமையான தண்டனை முறைகள் அம லாக்கப்படுகின்றன. இந்த ஆட்சி நடப்பதற்கு காரணமாக இருப்பது ஊழியர்கள். எனவே அரசு உடனடியாக தலையிட்டு தொழிற்சங் கத்துடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும்  என முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மக்கள் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். ஆனால் அரசு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வில்லை என்றால் பொதுமக்கள் ஆதரவோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் கூறினார்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இதற்கிடையே சங்க நிர்வாகிகளை அமைச்  சர் சிவசங்கரன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.தயா னந்தம், எம்.கனகசுந்தர், டி.ஜான்சன் கென்னடி, துணைத் தலைவர்கள் கே.பி.அன்பழகன், எம். சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப் போது சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த ஒரு வாரத்திற்குள் ஊதிய பேச்சுவார்த்தை துவக் கப்படும் என்றும், அப்போது அனைத்து கோரிக்  கைகளுக்கும் பேசி தீர்வு காணலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் சம்மேளனப் பொரு ளாளர் சசிகுமார், மாநகரப் போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை. பொரு ளாளர் பாலாஜி உள்ளிட்ட சம்மேளன நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.