states

மலக்குழி மரணங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்

சென்னை, ஜூலை 31- மலக்குழி, கழிவுநீர் மரணங்கள் தொடர்வதற்கு அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி கூறியுள்ளது. இதுகுறித்து முன்னணியின் தலைவர்  த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: சென்னை வெட்டுவாங்கேணி - நீலாங்கரையை சார்ந்த 67 வயது கூலித்தொழிலாளி காளிதாஸ், 29ஆம் தேதி கல்லுக்குட்டையில் உள்ள  சரவணன் என்பவரின் வீட்டு   கழிவுநீர் தொட்டியில் பாதுகாப்பு  உபகரணங்களின்றி இறக்கப்பட்டிருக் கிறார். கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே விஷ வாயு தாக்கி இறந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற வீட்டின் உரிமை யாளர் சரவணனும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.  “இறந்தவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் அல்ல என்றும் அது கழிவுநீர்  தொட்டி அல்ல என்றும் அதனால் ‘மனிதக் கழிவை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவதை தடை செய்யும் சட்டம்-2013’ கீழ் வழக்கு பதிவு செய்ய  முடியாது என்று  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

எந்தவொரு மனிதனையும் இது போன்ற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது குற்றம் என்பதையும், அதற்குரிய இழப்பீடு தந்து தான் தீர வேண்டும் என்றும் காவல் துறையினரிடம் முன்னணியின் நிர்வாகிகள் விலக்கினர்.  காவல்துறையின் அறிக்கையும் புகார் மனுவும் காளிதாஸ் விஷவாயு தாக்கி தான் இறந்தார் என்று குறிப்பிடு கிறது. ஆனால் ‘மனிதக் கழிவை அகற்ற  மனிதர்களை ஈடுபடுத்துவதை தடை செய்யும் சட்டம்-2013’ சட்டத்தை சேர்க்கவில்லை. இது போன்ற மலக்குழிகள் மற்றும்  கழிவு நீர் தொட்டிகளை சுத்தம்  செய்திட பெரும்பாலும் ஒப்பந்த தாரர்கள் வழியாக அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் அல்லது தினக் கூலி தொழிலாளிகள் தான் பயன்படுத் தப்படுகின்றனர். இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஊராட்சி கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளடக்கிய மாநில,ஒன்றிய அரசுகள் இப்பிரச்சினையில் கவனம் கொள்ள தவறுகின்றன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளோ, நிதி ஒதுக்கீடோ செய்யப்படுவதில்லை என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சுட்டிக்காட்டுகிறது. எனவே ஏதோ ஒரு சாதாரண செய்தி போல் இத்தகைய விஷவாயு மரணச்செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பொது சமூகமும், அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் தீவிரமாக செயலாற்றி அரசின் தலையீட்டை உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.