சேவாலயத்தின் மீது என்ன நடவடிக்கை?
மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய் யப்பட்டு இருந்தாலும், சம்பந்தப்பட்ட விவேகானந்த சேவாலய நிர்வா கத்தின் மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக கெட்டுப்போன உணவை உட்கொண்டு சிறுவர்கள் மூவர் உயிரி ழந்து, பலர் பாதிக்கப்பட்டபோது அந்த சேவாலயத்தில் காப்பாளரோ, சேவாலய நிர்வாகியோ அங்கு இல்லை. பொறுப்புள்ள அலுவலர், நிர்வாகி அங்கு இருந்திருந்தால் உரிய நேரத்தில் தலையிட்டு, சிறுவர் கள் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். சிறுவர்களுக்கு நீர்ச்சத்து முழு மையாக இழப்பு ஏற்பட்டு தான் மரணம் நிகழ்ந்தது என்று மருத்துவத் துறையினர் தெரிவித்தனர். எனவே நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்பிற்கு காரண மாக உள்ளது என்பது தெளிவாகிறது. அப்படி இருந்தும் விவேகானந்த சேவாலயத்தின் நிர்வாகி செந்தில்நாதன் உட்பட சம்பந்தப்பட்ட யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி உள்ளது. இந்த சம்பவத்தில் விவேகானந்த சேவால யத்திற்கு வருவாய்த் துறையினர் பூட்டு போட்டு மூடி விட்டனர் என்பதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சந்தே கத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர், அக்.19- திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி விவேகானந்த சேவாலயத் தில் கெட்டுப்போன உணவை சாப் பிட்டு மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் விவேகானந்த சேவால யம் என்ற பெயரில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்க வைக் கப்பட்டு இருந்தனர். கடந்த அக்டோ பர் 6 ஆம் தேதி அங்கு தங்கி இருந்த சிறுவர்கள் உடல் நலம் பாதிக் கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் இருவர் ஏற்கனவே விடுதியில் உயிரி ழந்த நிலையில் ஒரு சிறுவன் மருத் துவமனைக்கு கொண்டு வந்து சிகிச் சையின் போது உயிரிழந்தார்.
மற்ற 11 பேர் மற்றும் காப்பக காவ லாளி மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நலமடைந்தனர். மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழக அள வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. தமிழக அரசின் சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்பட மாநில உயர் அதிகாரிகள் நேரில் வந்து சம்பவம் நடைபெற்ற விவேகானந்த சேவா லயத்தை பார்வையிட்டு ஆய்வு செய் தனர். அத்துடன் தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி கொண்ட விசா ரணை குழு அமைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்யப் பட்டது. விவேகானந்த சேவாலயத்தில் தரமான கட்டிடம் இருந்த போதும், அங்கு இருந்த சிறுவர்கள் அருகா மையில் தனியாக தகர கொட்டகை யில் தங்க வைக்கப்பட்டு இருந்த னர் என்பதை அரசு துறையினர் பார்வையிட்டு கண்டறிந்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தை கள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ் சித பிரியாவிடம் விசாரணை செய் யப்பட்டது. அவர் ஏற்கனவே அந்த சேவாலயத்திற்கு ஆய்வுக்கு சென்றி ருந்தபோதும் இந்த நிலை இருந் ததை பார்வையிட்டு இருக்கிறார். எனினும் அந்தக் காப்பக நிர்வா கத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. இந்தப் பின்னணியில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாது காப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணி யிடை நீக்கம் செய்யப்பட்டு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில சமூக நலப் பாதுகாப்பு இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அவருக்கு பதி லாக சமூக பாதுகாப்புத்துறை நன்ன டத்தை அலுவலர் நித்யா திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல பாது காப்பு (பொறுப்பு) அலுவலராக நிய மனம் செய்யப்பட்டுள்ளார்.