states

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம்

இராணிப்பேட்டை, நவ.13- இராணிப்பேட்டை மாவட்டம்,  திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் ரமேஷ் மகள் நவிஷ்கா (4)  உயிரிழந்தார். விக்னேஷ் என்பவர் காயமடைந்தார். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்க ளுக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும்,  விக்னேஷ்-க்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.