சென்னை, அக். 10 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்க ளின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலி யுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி விடுத்துள்ளது செய்தியில், “நாகை மாவட்டம் கோடியக்கரை தென் கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் வலை ஜிபிஎஸ் கருவி உள்பட பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ள னர். வேதாரண்யம் பகுதி வெள்ளப் பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ப வருக்கு சொந்தமான படகில் சென்ற ஆறு.மணியன், ம.வேல்முருகன், செ.சத்தியராஜ், கு.கோடிலிங்கம், ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ஆனந்தன், சுப்பிரமணியன், சசிகுமார், சரத்குமார், மற்றொரு படகில் சென்ற சிவகுமார், சின்னதம்பி, பழனிவேல், சின்னை யன் ஆகியோரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமை யாக தாக்கியுள்ளனர். பலத்த காயத்துடன் மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மை காலமாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி பொருட் களை கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றிய அரசும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சர்வதேச காவல் துறை (இண்டர்போல்) உதவியுடன் கடற்கொள்ளையர் களை கைது செய்து தண்டிக்க வேண்டும். இத்தகைய சம்ப வங்கள் மேற்கொண்டு நடக்கா மல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலை மற்றும் ஜிபிஎஸ் கருவி கள் பறிகொடுத்த மீனவர்களுக்கு மீண்டும் அவற்றை வாங்கவும், படுகாயமடைந்த மீனவர்களுக் கும் உரிய நிதி உதவியும் ஒன்றிய, மாநில அரசு வழங்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.