states

விவசாயிகளுக்கான நிவாரணம் போதுமானதல்ல: விவசாயிகள் சங்கம்

சென்னை, அக்.6- டெல்டாவில் குறுவை பயிர் சாகுபடி பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முதலமைச்சர் அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயி கள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத் தால், மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது  டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப் பட்டுள்ளது.

பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாகக் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து  500 ரூபாய் இழப்பீடாக வழங்க அக்.5 அன்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கம் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் இல்லாத போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை யும், காவிரி ஆணையம் தீர்ப்புகளையும் அமல்படுத்தாத கர்நாடக அரசை கண்டித் தும், காய்ந்து கருகிய குறுவை பயிர்க ளுக்கு  ஹெக்டேருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் உட்பட கடந்த மாதம் 20 ஆம்  தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர், குறுவை பயிர் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 நிவாரணம் அறிவித்திருக்கிறார். இந்த நிவாரணம் விவசாயிகளுக்கு போது மானதல்ல. ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு  மாநில அரசின் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.37,000 கடன் பெறும் போது, ஏக்கருக்கு ரூ.5,400 தருவது ஏற்புடையதல்ல. காய்ந்து கருகி போன பயிர்கள் 2 லட்சம் ஏக்கர் உள்ள  நிலையில் 40 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்திருப்பது ஏற்க முடியாது. எனவே, மாநில அரசு முறையான கணக் கெடுப்பு நடத்தி,  அறிவித்திருக்கும் நிவாரண தொகையை  உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.