நீரில் மூழ்கி இறந்த 4 சிறுவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 19- நீரில் மூழ்கி இறந்த 4 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி வட்டம், உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்திலுள்ள செட்டி ஊருணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி (10), மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய 3 சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயர மான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் அபினேஷ் (16), அதே தெரு வின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டை க்கு குளிக்க சென்ற பொழுது எதிர் பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரி ழந்துள்ளார் என்ற துயரச் செய்தி னையும் கேட்டு மிகவும் வேதனை அடை ந்தேன். உயிரிழந்த நான்கு சிறார்க ளின் பெற்றோர் மற்றும் உறவினர் களுக்கு எனது ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதல்களையும் தெரிவித் துக் கொள்வதோடு அவர்களின் குடும்ப த்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்து ரூ.5 லட்சம் சுருட்டல்
சென்னை,மார்ச் 19- சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம். இவர் அரும்பாக் கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போனுக்கு ‘ஆன்லைன் கோல்டு டிரேடிஸ்’ என்ற பெயரில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து குறுஞ் செய்தி (எஸ்எம்எஸ்) வந்துள்ளது. அதில் குஜராத்திலுள்ள எஸ்.வங்கியின் வங்கி கணக்கு குறி ப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர் ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ. 5 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். குறுஞ் செய்தியை அனுப்பிய நபரே ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அரும்பாக்கம் காவல்நிலையத்தில் ரகுராம் புகார் அளித்தார். பின்னர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங் களை மேற்கொண்டு வருகிறார் கள். தேவையில்லாமல் வரும் குறுஞ் செய்திகளை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தொடர்ந்து அறிவுரை கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் ஆன்லைன் வியா பாரத்தை நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
சென்னை,மார்ச் 19- சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக 40 லாரிகள் வரை வந்து கொண்டி ருந்த வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 50 லாரிகளில் பெரிய வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஆந்திரா வெங்காயம் ரூ.12 வரை விற்கப்பட் டது. நாசிக் மற்றும் கர்நாடகா வெங்காயம் ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ15 வரை விற்பனை யானது. பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வருக்கு சட்டப் போராட்டக் குழு வேண்டுகோள்
சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு அரசின் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை திங்களன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்படுகிறது. இதில் அரசு மருத்துவர்களின் நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அரசு மருத்து வர்களுக்கான சட்டப் போராட்டக் குழு முதலமைச்சருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவாது:- தமிழ்நாட்டில் கடந்த 10, 15 ஆண்டுகளில், சுகாதாரக் கட்ட மைப்பு பல மடங்கு வலுப்படுத் தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆனால், இங்கு அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டும், 13 ஆண்டுக ளுக்கு பின்தங்கியும், நாட்டி லேயே மிக குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தர ப்படும் ஊதியத்தை விட, 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் களுக்கு மாத ஊதியம் தரப்படு கிறது. கடந்த ஆண்டு சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது நடந்த விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்து வர் எழிலன் (திமுக), எம். சின்னத் துரை (சிபிஎம்) ஆகியோர் அர சாணை 354 ஐ நடைமுறைப் படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர். ஆனால் இது வரை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசாணை 354இன் படி 12 ஆண்டுகளில் ஊதியப் பட்டை நான்கு வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்கிற அரசு மருத்துவர்களின் நியாய மான கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளி யிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.