தில்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடப் பதை ஒட்டி வரும் 8 அன்று முதல் 11 வரை சுமார் 300 ரயில்களின் வழக்கமான சேவை பாதிக்கும் எனவும், பல ரயில்களை ரத்து செய்தும், வழித்தடத்தை மாற்றி இயக்குவதாகவும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா அருகே உள்ள ராமபுரம் பகுதியை சேர்ந்த வர் ஜோமோன் (42). அவருக்கு மனைவியும், 13, 10, 7 வயதில் 3 மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஜோமோனின் மனைவி தனியாக வசித்து வரும் நிலையில், திங்களன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மகள்களின் கழுத்தை அறுத்து, ஜோமோன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரி வுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறி வித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதி யம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறச்சீற் றம் நிறைந்த பேச்சு ஆதிக்க சக்திகளிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.. வாழ்த்துகள்!” என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகா ணத்தில் உள்ள கடலோர நகரமான குவா டரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி யில் ஈடுபட்டு கொண்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் கோமதி புரம் பகுதியில் கடந்த 2008இல் பரந்தாமனுக்கு சொந்தமான இடத்தில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. அதேபோல் நடுக்குத்தகை பவானி நகரில் குமரேசன் என்பவரது இடத்தில் ரூ.26 லட்சம் செலவில் மற்றொரு செல்போன் கோபுரமும் அமைக்கப்பட்டது. ரூ.36 லட்சத்தில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரம் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை அவமதிக்கும் வகையில், அரசு பேருந்துகளில் திருக்குறளை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் உணர்வாளர்கள் கடும் அதிருப்தி தெரி வித்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சி யினர் நிறைவேற்ற விட மாட்டார்கள் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.