states

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்க்கு நீதி கிடைக்குமா?

தமிழ்நாட்டில் சமீப காலமாக தனியார் கல்வி நிறுவன வளாகங்களில் நடக்கும் சம்பவங்கள் எதை நோக்கிச் செல்கின்றன? நமக்கு எதை பறைசாற்றுகின்றன? எதிர்காலம் என்னவாகும்? இதை எல்லாம் சற்றும் யோசித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திலும் சின்ன சேலத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவி லும் உள்ளது கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணம் ஏற்படுத்திய சந்தேகம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. 

கனியாமூர் சக்தி தனியார் பள்ளியின்  தாளாளர் சக்தி ரவிக்குமார். இவர் பாஜக வின் தமிழ் வளர்ச்சி குழு முன்னாள் மாநில அமைப்பாளர். அந்தக் கட்சியின் தேசிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜாவின் இந்து ஆலய மீட்பு இயக்கத்திலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்தப் பள்ளியில்தான் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம், பாஜகவின் பயிற்சி பாசறை, பட்ட றைகள் நடந்து வருகின்றன. தஞ்சை அருகே தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவியின் மரணத்திற்கு காரணம் மதமாற்றம் என்று உள்நோக்கம் கற்பித்து  மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்தவர் அண்ணாமலை.  சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் கள்ள மவுனம் சாதிப்பதன் பின்னணி என்ன?

இம்மாதம் 13ஆம் தேதி காலையில் 6.20 மணிக்கு ஸ்ரீமதியின் பெற்றோரை சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகி ரவிக் குமாரின் மனைவி சாந்தி அலைபேசியில் தொடர்பு கொள்கிறார். மூன்றாவது மாடி யில் இருந்து மாணவி குதித்து விட்டதாக முதல் தகவல். சற்று நேரத்தில் இரண்டா வது முறையாக அலைபேசியில் அழைக்கி றார். அந்த மாணவி இறந்து விட்டதாகவும் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் நேரடியாக அங்கு வந்து விடுங்கள் என்றும் பெற்றோ ருக்கு தெரிவிக்கிறார். அந்த நேரம் பெற்றோரின் மனது எப்படி இருக்கும்? எப்படி எல்லாம் பதறியிருப்பார் கள்? அடுத்த கணமே சொந்த ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் கண்ணீரும் கம்பலையு மாக குறிச்சியை வந்தடைந்தனர். மகளின் உயிரற்ற தேகத்தை பார்த்ததும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். குறிப்பாக, மாணவியின் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நான்கு இடங்களில் ரத்தம் இருந்துள்ளது. (இது உடற்கூறாய்வு  மருத்துவ அறிக்கையிலும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.) மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்தாரா? பாலியல் வல்லுறவு நடந்ததா? கொலை செய்யப்பட்டாரா? சிசி டிவி காட்சிகளை கொடுக்க மறுப்பது ஏன்? பள்ளியின் சுவரில் மாணவியின் ரத்தம் படிந்த கைரேகை எப்படி வந்தது? இப்படி ஏராளமான சந்தேகங்கள் ஏற்பட்டதால் நீதி கேட்டு போராட்டத்தை துவக்கினர்.

சமூகத்தில் எந்த ஒரு மாணவிக்கும் இது போன்ற ஒரு நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமை கட்சி அமைப்பு களின் தலைவர்களும் தொண்டர்களும் ஸ்ரீமதியின் பெற்றோர் உறவினர்களுடன்  போராட்டத்தில் கைகோர்த்தனர். மாவட்ட கல்வித்துறை, காவல்துறை அதி காரிகள் ஆட்சியர் ஆகியோர் அப்போதே உரிய முறையில் தலையீடு செய்து நடவ டிக்கை எடுக்கத் தவறியதன் விளைவு மிகப் பெரிய அளவில் கலவரத்திற்கு வழி ஏற்படுத்திவிட்டது. இந்த கலவரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை அடுத்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக  இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படு வார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்ட வேண்டுகோள், அமைச் சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்த நிகழ்வு, உள் துறை மற்றும் காவல்துறை உயர் அதி காரிகளை பக்குவமாக கையாண்ட விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

இந்த நிலையில், கலவரம் நடந்த தனி யார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி (ரவிக்குமாரின் மனைவி) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் ப்பள்ளியில் மாணவிகள் கொடுமைப்படுத் தப்படுவது, பாதிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் ஏராளமான புகார்கள் உள்ளன. இதனை இடதுசாரி அமைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பே  மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தி இருக்கின்றன. ஆனால் தவறுகளை சுட்டிக்காட்டி, நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்ப தற்கு மாறாக அதனை மூடி மறைப்பது போல் கல்வித்துறையும் அரசு அதிகாரிக ளும் நடந்து கொண்டதே பொது மக்களிடம் கோபத்தை அதிகரித்து இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் படிக்க வைக்கும் குழந்தைகளை ஸ்ரீமதியை போன்று பிணமாக பார்க்கும் பெற்றோர் எத்தகைய மனநிலையில் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதனால்தான் உள்ளூர் மக்க ளுக்கும் இந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் நம்பகத் தன்மை ஏற்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில்தான், இரு  வேறு பிரிவு சாதியின் பெயரால் சில  அமைப் புகளும் போராட்டக் களத்தில் ஊடுருவி இருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் அணிதிரட்டியிருக்கின்றன. சாதிய ரீதியாக பரப்பிய திசை திருப்பு பிரச்சாரமும் பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் ஓரிரு நாட்க ளில் படையெடுத்து கலவர பூமியாக மாற்றி இருக் கின்றனர். இந்த நிகழ்வு தடுக்கப்படாதது காவல் துறையின் தோல்வி என்றே கூறலாம். இனியாவது வெறுப்பு, விருப்புக்கு அப்பாற்பட்டு பள்ளியில் என்ன நடந்தது? மாணவி இறந்தது எப்படி? கலவரத்தை தூண்டியது யார்? அதன் பின்னணி என்ன? நீதி கேட்டு தொடங்கிய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து விடக்கூடாது என்று சதி திட்டம் நடக்கிறதா? இவை பற்றி உளவுத் துறையும் காவல்துறையும் விரிவாக விரை வாக, நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை யும் மகளை பறிகொடுத்த பெற்றோருக்கு  நீதியும் கிடைத்திட முதல்வரும் நடவ டிக்கை எடுக்கவேண்டும்!    - ந.சி.நி