states

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி: முதல்வர் அறிவிப்பு

சென்னை,ஏப்.8- அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளி யன்று (ஏப்.8) கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக்கோரிக்கைகள் மீது  நடந்த விவாதத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ,“ மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து கேள்வி எழுப்பி னார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல மைச்சர் ஸ்டாலின்,“ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நோக்கத்தில் மறைந்த முதல்வர் கருணா நிதியால், 2-9-1989-இல், ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படை யிலே, மொத்தம் 12, 617 ஊராட்சிகளுக்கு 25  ஆயிரத்து 234 மக்கள் நலப் பணியாளர்கள் அப்போது நியமனம் செய்யப்பட்டார்கள்” என்றார். கிராம பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது, சிறு சேமிப்புத் திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளை மக்கள் நலப் பணி யாளர்கள் செய்து வந்தனர் .

ஆட்சி மாற்றத் திற்கு பிறகு, 13.07.1991 இல் இப்பணியிடங் கள் அன்றைய அதிமுக அரசுதான் ரத்து செய்தது என்றும் முதலமைச்சர் கூறினார். அதிமுக ஆட்சிக்கு வரும்பொழு தெல்லாம் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்வதும் திமுக ஆட்சிக்கு  வரும்போதெல்லாம் மீண்டும் பணியில் அமர்த்துவதும்தான் மாறி, மாறி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது இதனுடைய தொடர்ச்சியாக, மக்கள் நலப் பணி யாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் மீளப்  பணி வழங்க வேண்டுமென்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்களை தாக்கல் செய்தது. இன்னுமும் அந்த வழக்கு  நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர் களின் நீண்ட நாள் கோரிக்கையினைக் கருத் தில்கொண்டு, மாநிலத்திலுள்ள 12,524 கிராம  ஊராட்சிகளிலுள்ள “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த பணிக்கு மதிப்பூதியமாக ரூ.3,000-லிருந்து ரூ.5,000- ஆக உயர்த்தி வழங்கப்படும்.  மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டும், கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து மாதம்  ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கவும், இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த  மதிப்பூதியமாக ரூ.7,500- வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுக் காலத்தில், காலமான மக்கள் நலப் பணி யாளர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் விரும் பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதித் திட்டப் பணி  ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய  வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல மைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.