states

கலைப் பங்களிப்புகளால் எப்போதும் நினைவு கூரப்படுவார் ராமு

சென்னை, ஜூன் 28-  இறுதிவரை இடதுசாரியாக வாழ்ந்த  திரைக்கலைஞர் கருப்பு ராமு தனது பணிகளுக்காகவும் கலைப் பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.  சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங் கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி யிருப்பதாவது:  தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பின ரும், வீதி நாடக மற்றும் திரைக்கலை ஞருமான தோழர் வ.இராமு அவர் கள் ஜூன் 27  அன்று மாலை உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரது மறைவிற்கு தமுஎகச மாநிலக்குழு நெஞ்சார்ந்த அஞ்சலி யைத் தெரிவித்துக் கொள்கிறது.  மாணவப்பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வழியே பொது வாழ்க்கைக்கு வந்த ராமு, இறுதி வரை  இடதுசாரியாக வாழ்வை மேற் கொண்டவர்.  சாதி மறுப்பும் சடங்கு மறுப்பும் சொந்தவாழ்வில் பின்பற் றப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும் விதமாக தன் பெற்றோ ரின் இசைவுடன் காதல் மணம் புரிந்தவர்.

தென்சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலை ஞர்கள் சங்கத்தை கட்டியமைக்க வும், அப்பகுதியின் கொண்டாட்டத் திற்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக சைதை கலை இரவினை வடிவ மைக்கவும் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். “கனவுகள் 2000” என்ற தலைப்பில் புத்தாயிரமாவது ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ் வினை வெற்றிகரமாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நல வாரியம் அமைவதற்கு அடிகோலிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக் கைச் சங்கமத்தை முன்னின்று நடத்தியவர். 1990ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சென்னை கலைக் குழுவில் இணைந்திருந்த ராமு அக் குழுவினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிலும் கவனம் பெறத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்தார். குறிப்பாக, பயணம் நாடகத் தில் அவர் ஏற்று நடித்த “நகரதேவன்” பாத்திரம் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாய் இருந்தது.   ஆட்டோ ராமு, பூ ராமு, கருப்பு ராமு என நமக்குள் நிறைந்திருக்கும் தோழர் ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப் பங்களிப்புகளுக்காகவும் நினைவு கூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உற வினர் யாவரது துயரிலும் தமுஎகச மாநிலக்குழு பங்கெடுக்கிறது.  இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.