states

நான்கு நாட்களில் சொந்த ஊர் திரும்பும் இராமேஸ்வரம் மீனவர்கள்

இராமேஸ்வரம், நவ.13- தமிழகத்தைச் சேர்ந்த 42 இந்திய மீனவர்களை  இலங்கை நீதிமன்றம் நவம்பர் 9 அன்று  விடுதலை செய்தது.  இந்நிலையில், இவர்கள் அனைவரும் நான்கு நாட் களில் சொந்த ஊருக்கு வரு வார்கள்  என எதிர்பார்க்கப் படுவதாக மீனவர் சங்கத் தலைவர் பி.ஜேசுராஜா திங்களன்று தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் மூன்று வெவ்வேறு சம்பவங்களில், இலங்கைக் கடற்படையினர் 64 தமிழக மீனவர்களை கைது செய்த துடன், அவர்களது 10 இயந்திரப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, திமுக நாடா ளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, இராமநாதபுரம் மக்க ளவை உறுப்பினர் நவாஷ் கனி, மீனவர் சங்கத் தலை வர் பி.ஜேசுராஜா ஆகியோர் தலைமையில் சென்ற குழு வினர் ஒன்றிய வெளியுற வுத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினர்.  அப்போது மீனவர் களை விடுவிக்க நடவடி க்கை எடுப்பதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்திருந் தார். இதற்கிடையில், நவம்பர்  9 அன்று, 42 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களது படகு களை விடுவிக்க உத்தர விடவில்லை.