states

படுகொலை செய்யப்பட்ட மீனவப் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடுக : சிபிஎம்

சென்னை, மே 27- இராமேஸ்வரத்தில் மீனவப் பெண் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: இராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் மே  25   அன்று கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேத னையையும் ஏற்படுத்துகிறது. இந்த கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கடல்பாசி எடுக்கச் சென்ற அவரை வழிமறித்து காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்று, கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி சித்ரவதை செய்து, மிகவும் கொடூரமான முறையில் முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளனர். இது தமிழக மக்கள் மத்தி யில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கி யுள்ளது. இந்த படுகொலையில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என கருதி 6 பேரை காவல்துறையினர் கைது செய்தது வர வேற்கத்தக்கது. இருப்பினும் இந்த படு கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென காவல் துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறோம். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் அதி கரித்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற குற்றங்கள் நடப்பதற்கு போதை பழக்க மும் காரணமாக உள்ளது. போதைப் பொருள் விற்பனை தடையை கறாராக அமல்படுத்த வேண்டுமெனவும், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

இந்த பிரச்சனையில் தமிழக முத லமைச்சர் தனிக்கவனம் எடுத்து, இது போன்ற வன்முறையை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, காவல்துறை யினருக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கேட்டுக் கொள்கிறது. மேலும் படு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம்  வழங்க வேண்டும்.  அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுப்பதற்கு அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் முன்வைத்து வருகிற ஆலோசனைகளை பரிசீலித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;