குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு நன்மையை செய்துவிட்டதாக மோடி அரசாங்கம் பொய் பிரச்சாரம் செய்து காதில் பூ சுற்றுகிறது. விவசாய இடு பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தின் பின்னணியில் இந்த உயர்வு விவசாய செலவுகளை கூட ஈடுகட்டாது. பெரும் கார்ப்பரேட் ஆதரவாகவும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகவும் உள்ள வெத்துவேட்டு மோடி அரசின் கொள்கைகள் துன்பங்களை அதிகரிக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக் கோரி நடக்கும் இயக்கங்களில் பங்கேற்பீர்.
2020-21ல் மைனஸ் 6.6 சதவீத ஜி.டி.பி. வளர்ச்சி. இந்த சரிவான அடித்தளத்திலிருந்து 2021-22ல் 8.7 சதவீத வளர்ச்சி என உலக வங்கி மதிப்பீடு! உண்மையில் 2019-20 உடன் ஒப்பிடும் பொழுது 2 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சி. கவலை தருவது என்னவெனில் 2022-23ல் 7.5 சதவீதம் எனவும் 2023-24ல் 7.1 சதவீதம் எனவும் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு! பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள். வருமான வரி வரம்புக்கு வெளியே இருக்கும் ஏழைகளுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவுப் பொருட்களும் கொடுங்கள்.
எதிர்ப்பு தெரிவிக்கும் காரணத்தாலேயே முஸ்லீம்களின் வீடுகளை இடிப்பது சட்டவிரோதச் செயல். தேசத்தின் சட்டங்களை மீறும் இந்த இடிப்புகளை நிறுத்துங்கள். அனைத்துச் சட்டங்களையும் வழிமுறைகளையும் மீறி முஸ்லீம் சிறுபான்மை மக்களை குறிவைப்பதன் மூலம் மதப் பிளவுகளை கூர்மையாக்குவது நமது அரசியல் சாசனத்தை இடிப்பதற்கு சமம்.
மனித கழிவுகளையும் கழிவு நீரையும் அகற்றும் கொடூரமான பணிகளில் மனித உயிர்கள் இழப்பது தொடர்கிறது. இந்த மோசமான நடை
முறையை உடனடியாக நிறுத்துங்கள். ஏன் மோடி அரசாங்கம் இந்த தடையை அமலாக்க மறுக்கிறது? இந்தியாவை பழைய காலத்துக்கு எடுத்து செல்லும் மனித குல முன்னேற்றத்தை தடுக்கும் மனுதர்ம சாதிய அடக்குமுறையின் வெளிப்பாடா இது?