- அக்னிபாதை எதிர்ப்புப் போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட் டம் நிகழ்ந்த காலகட்ட மான ஜூன் 14 முதல் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணத் தொகை ரூ.102.96 கோடி திருப்பி அளிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.
- அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற் றும் பெண் ஊழியர் களுக்கு இறுதி மாத விடாய் கால கொள்கை (மெனோபாஸ் கொள்கை) என தனிக் கொள்கை எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிப்பு.
- தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அழைப்பு விடுத்த வாராந்திர கூட்டத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ் ரிவால் புறக்கணித்தார்.
- மாற்றுத்திறனாளிகளை விமானத்தில் ஏற அனு மதி மறுப்பது குறித்து விமான நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். விமான நிறு வனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை.
- அக்னிபாதை மற்றும் எல்ஏசி (எல்லைக் கட்டுப்பாடு கோட்டு) நிலவரத்தை விவாதிக்க வேண்டும் என்ற கோரி க்கையை பாதுகாப்புக் கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் நிராகரித்ததால் காங் கிரஸின் கே.சி.வேணு கோபால், உத்தம் கே.ஆர் ரெட்டி மற்றும் பாது காப்புக்கான நாடாளு மன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- உமேஷ் கோல்கே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை அமராவதி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ ஆஜர்படுத்தியது. குற்ற வாளிகளை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- கேரளாவில் மேலும் ஒரு வருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. ஏற்கெனவே மாநிலத்தில் 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
- எனது மகன் பி.ஒய்.விஜ யேந்திரனுக்காக எனது சட்டமன்ற தொகுதியை விட்டுக்கொடுக்கிறேன். ஷிகாரிபுரா தொகுதி வாக்காளர்கள் அவரை அதிக வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொ ள்கிறேன். அடுத்த தேர்த லில் நான் போட்டியிட மாட்டேன் என கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரு மான பி.எஸ்.எடியூரப்பா பேசியுள்ளார்.
- உக்ரைனுடனான மோதல் 21ஆவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியிலான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. தனது தாக்குதலுக்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று பெயரிட்டுள்ள ரஷ்யாவுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது.
- இந்தோனேசியாவில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது. வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் பகுதியில் நாய்க்கறி உணவகங்களும் அதிகரித்துள்ளன. மேடன் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களிலுமே நாய்க்கறி கிடைக்கிறது. இந்தோனேசியாவின் 27 கோடி மக்களில் 7 விழுக்காட்டினர் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள். நாய்க்கறி சாப்பிடுவது பற்றிக் கேட்டபோது, “எனக்குப் பசிக்கிறது. அதனால் சாப்பிடுகிறேன்” என மிகவும் எளிமையான பதில் கிடைத்தது.
- மெர்கோசர் என்று அழைக்கப்படும் தென் அமெரிக்கப் பொதுச் சந்தையை பலப்படுத்த வேண்டும் என்று அர்ஜெண்டினாவின் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தையால் ஒட்டுமொத்த உலகத்திற்கும் உணவளிக்க முடியும் என்று கூறியுள்ள அவர், “நமக்கு முன்னால் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. உலகம் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தச் சூழலில் அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இணைந்து பயணிக்கவிருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.