உணவு பாதுகாப்பு: தமிழ்நாடு முதலிடம்!
பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ண யம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு குறியீட்டில், பெரிய மாநி லங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத், 3-ஆவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலங்கள் வந்துள்ளன. மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும், மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் வநதுள்ளன.
சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல்காந்தி சந்திப்பு!
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா, பஞ்சாப்பில் உள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த மே 29 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப் படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சித்து மூஸ் வாலாவின் சொந்த கிராமமான மூஸா கிரா மத்தில் அவரது குடும்பத்தினரை செவ்வாயன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சித்து மூஸ் வாலா படத்திற்கும் அவர் மரி யாதை செலுத்தினார்.
தங்கக் காசுகள் பறிமுதல்?
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கடந்த மே 30 அன்று கைது செய்தனர். அவரை ஜூன் 9 வரை காவலில் எடுத்துள்ள அவர்கள், திங்களன்று சத்யேந்தர் ஜெயின் தொடர்புடைய இடங்களில் சோதனையிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனையில், ரூ. 2 கோடியே 82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1 கிலோ 80 கிராம் எடைகொண்ட 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து பெண் பாலியல் வல்லுறவு!
கோவாவின் வடக்கே அமைந்துள்ள ஆரம்போல் ஸ்வீட் வாட்டர் பீச்சிற்கு வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் உள்பட பலர் வருவது வழக்கம். அந்த வகையில் 32 வயதுடைய இங்கிலாந்து பெண் ஒருவர் தனது கணவருடன் இந்த பீச்சுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் பீச்சில் ஓய்வெடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒருவர், இங்கிலாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அளித்த புகாரின் பேரில், தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 9 ஆம் தேதி யன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலுக்கு அந்நாட்டின் தேர்தல் ஆணை யம் ஒப்புதல் அளித்திருக்கிறது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி வேட்பாளர்கள் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார் களா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணை யத்துடையதாகும்.
2018 ஆம் ஆண்டில் கொலம்பியாவின் ஜனாதிபதியாக இவான் டியூக் பொறுப்பேற்றதில் இருந்து, தற்போது வரையில் 903 தலைவர்கள் மற்றும் மனித உரிமைப் போராளி கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்று வாக்குப்பதிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தப் படுகொலைகள் பற்றிய விவாதம் பெரிய அளவில் நடக்கிறது. அமைதி உடன்பாடுகளை மீறி அரசு எதிர்ப்புப் போராளிகள் பலரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் இப்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்கள் கட்சி சார்பில் அமைச்சரவையில் இருக்கும் நான்கு பேரையும் மாற்ற வேண்டும் என்று மாதவ் குமார் நேபாள் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்டு) கோரியிருந்தது. புதிய பட்டியலையும் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவிடம் அளித்திருந்தனர். பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால் இடையில் மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.