புதுதில்லி, ஜன.14- “வெறுப்புணர்வையும், தீய கொள்கைகளையும் இந்தியா நிராகரிக்கும்” என்று நாட்டு மக்களுக்கு எழுதி யுள்ள கடிதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறிப் பிட்டுள்ளார். தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வெள்ளி யன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டியளித்தார். அப்போது, ராகுல் காந்தியின் கடிதத்தை அவர் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இளைஞர்கள் இடையே வேலையின்மை, மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வு, விவசாயிகள் எதிர் கொண்டுள்ள துன்பங்கள், நாட்டின் வளத்தை முழுமை யாக கைப்பற்றும் பெருநிறுவனங்கள் என நாட்டில் பெரும் பொருளாதார பிரச்சனை உருவாகி வருகிறது. பிளவுபடுத்தும் சக்திகளால், நாட்டின் பன்முகத்தன்மை அச்சுறுத்தலில் உள்ளது. மதம், இனம், பிராந்தியம் அடிப்ப டையில் மக்களிடையே மோதலை உருவாக்கி, பன்முகத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்க அந்த சக்திகள் முயற்சித்து வருகின்றன.
பாதுகாப்பற்ற, அச்சம் நிறைந்த உணர்வில் மக்கள் இருந்தால்தான், அவர்களிடையே வெறுப்புணர்வை புகுத்த முடியும் என்பது அந்த சக்திகளுக்கு தெரியும். ஆனால், வெறுப்புணர்வும் தீய அரசியல் கொள்கை களும் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்ற நம்பிக்கை, இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பிறகு எனக்கு ஏற்பட்டுள்ளது. பிளவுபடுத்தும் சக்திகளை ஒழிக்க, தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை போராட உறுதியேற்றுள்ளேன். வெறுப்புணர்வை இந்தியா நிராகரிக்கும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு உள்ளது. சாதி, மதம், மொழி, பாலினம் மற்றும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒன்றுபடுவோம். இந்திய ஒற்றுமை நடைப்பயணம், எனது போராடும் வீரியத்துக்கு புத்துயிரூட்டியுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த கடிதமும், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் விரைவில் வெளியிடவிருக்கும் ‘குற்றப்பத்திரிகையும்’ கட்சித் தொண்டர்களால் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரி வித்துள்ளார்.