ராஜபக்சே அடைக்கலம் தேடி இந்தியா வரவில்லை
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜ பக்சே தனது குடும்பத்துடன் இந்தியா வில் அடைக்கலம் புகுந்திருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. ‘‘குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊட கங்களிலும் வதந்திகள் பரவுகிறது. இதனை இந்திய தூதரகம் கடுமையாக மறுக்கின்றது’’ என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கை நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
“இலங்கையில் இப்போது நடப்பவற்றை பார்த்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். 2014 முதல் இந்தியாவில் வகுப்புவாத வெறி அதிகரித்துள்ளது. இலங்கையைப் போன்று தீவிர தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாத பாதையில்தான் இந்தியா செல்கிறது. இவை அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்” என மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.
ஒன்றிய அரசு 100 சதவிகிதம் தோற்றுப்போய் விட்டது!
“நரேந்திர மோடி அரசு கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது, பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை தீர்ப்போம் என மக்களுக்கு உறுதி அளித்தனர். ஆனால், அவர்கள் 100 சதவிகிதம் தோல்வி அடைந்து விட்டனர். அதற்கான விலையை மக்கள் சரியான நேரத்தில் அவர்களிடம் இருந்து திருப்பி எடுத்துக் கொள்வார்கள்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கோலாப்பூரில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை காலை 8 மணி நிலவரப்படி 107.06 அடி யாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.29 டிஎம்சியாக உள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 3,135 கன அடியிலிருந்து 3,773 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலி ருந்து குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை!
அசானி புயல் காரணமாக பரவலான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தி ருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, தேக்கடி, பெரியாறு அணை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு, 847 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு விநாடிக்கு 100 கன அடி அளவிற்கே நீர் வெளியேற்றப்பட்டது. புதனன்று அணையின் நீர் மட்டம் 129.80 அடியாகவும், நீர் இருப்பு 4,654 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
உத்தரகண்டில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் புதனன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. “புதனன்று காலை 10.30-க்கு ஏற்பட்ட நிலநடுக்கமா னது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. பித்ரோகருக்கு வடகிழக்கில் 20 கி.மீ தொலைவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை” என்று தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
தமிழக கடல்வழி ஊடுருவல்: ஒன்றிய அரசு எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபட்சேவுக்கு எதிராக அந்நாட்டு பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், “இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலில், அகதிகளுடன் தேச விரோத கும்பலும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது” என்றும், எனவே, “தமிழக கட லோர பகுதிகளை கண்காணிக்குமாறும் தமிழக காவல்துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்ச கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ராம் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான பண்டிட் சுக் ராம் புதன்கிழ மையன்று காலமானார். அவருக்கு வயது 95. இமாசலப் பிரதேசம் மணாலியில் வசித்து வந்த பண்டிட் சுக் ராம், மூளைப் பக்கவாதம் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு இருந்தார். அங்கு புதனன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். 1993 முதல் 1996 வரை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், மேலும் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், 5 முறை இமாச்சல் சட்டப்பேரவை உறுப்பினராகவும் சுக் ராம் இருந்துள்ளார்.
87 வயதில் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்ச்சி
ஹரியானா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராக இருப்பவர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர், ஹரியானா மாநிலத்தில் 4 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் நீண்டகாலம் சிறைத்தண் டனை அனுபவித்த அவர், சிறையில் இருந்தபடியே கடந்த 2019-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வுபெறாமல் இருந்தார். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் ஆங்கிலத் தேர்வில் 88 சதவிகித மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, தனது 87-ஆவது வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
புற்று நோயாளிகளுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ‘அடல் கேன்சர் பென்சன் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் மட்டு மல்லாமல், தலசீமியா மற்றும் ஹீமோபிலியா ஆகிய வியாதிகளால் அவதிப்படும் நோயாளி களுக்கும் இந்த பென்சன் தொகை கிடைக்கும் என்று ஹரியானா அரசு கூறியுள்ளது.
ம.பி. பாஜக அமைச்சரின் மருமகள் சாவில் மர்மம்?
மத்திய பிரதேச பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் இந்தேர் சிங். இவரது மகன் தேவ ராஜ் சிங்-கிற்கும், சவிதா பர்மர் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. இந்நிலையில், ம.பி. மாநிலம் ஷஜாப்பூர் மாவட்டம் பொன்சனீர் கிராமத்தில் சவிதா பர்மர் (22) தூக்கிட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலையா; இல்லை கொலையா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
பாரசீக வளைகுடாப் பகுதியில் அந்நியப் படைகள் இருப்பது கடும் விளைவுகளை உருவாக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மாறாக, வளைகுடா நாடுகள் அனைத்தும் இணைந்து தங்களுக்கென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரானின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அலி பகேரி கனி கோரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், “ஈரான் மற்றும் இப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு ஒரே மாதிரியான நலன்கள்தான் உள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள அல் காலி நகரில் இருந்து 1,300 பாலஸ்தீன மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் முயற்சித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவது, கட்டிடங்களை நொறுக்குவது மற்றும் காலி செய்தல் ஆகியவை சட்டவிரோதமானவை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதைத் தடுக்க இயலாததால் ஸ்பெயினின் உளவுத்துறை இயக்குநர் பாஸ் எஸ்டெபன் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தனிநாடு கோரி வரும் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதை கடந்த வாரத்தில் நடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எஸ்டெபன் உறுதி செய்திருந்தார்.