states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜி-20 மாநாடு : 160 விமானங்கள் ரத்து

புதுதில்லி, ஆக.26- தில்லியில் செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள ஜி-20  மாநாட்டை முன்னிட்டு 3 நாட்கள் மட்டும்  160 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தில்லி விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. அதா வது தில்லி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 80 (வருகை), 80 (புறப்பாடு) விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடு சர்வதேச விமான சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஆக.26- இன்று (ஆகஸ்ட் 27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும். திருப்பத்தூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், செங் கல்பட்டு, விழுப்புரம், கட லூர், கள்ளக்குறிச்சி மாவட்  டங்கள் மற்றும் புதுச்சேரி யில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள் ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆகஸ்ட் 28 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட்  29  முதல்  செப்டம்பர் 1 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.சென்னை யை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான/  மிதமான மழை பெய்யக்  கூடும் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘கங்காவரம்’ அதானிக்கு கைமாறிய ரகசியம் தெரிய வேண்டும்...

கங்காவரம் துறைமுகத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது தொடர்பாக காங்கி ரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான நாளிதழ் செய்தி யை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்  செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “பல துறைகளில் மோடி உருவாக்கிய ‘ஏகாதிபத்தியம்’ (அதானி குழுமம்), அதிர்ச்சி அளிக்கும்  வகையில், கங்காவரம் துறை முகத்தையும் கையகப்படுத்தி உள்ளது. கடன் இல்லாத- ஆந்திரா வின் கங்காவரம் துறைமுகத்தை அதானி எப்படி 6 ஆயிரத்து 200  கோடிக்கு விலைக்கு வாங்கினார்?  கடன் சுமை நிறைந்த கிருஷ்ணபட்டி னம் துறைமுகத்துடனான அதானி யின் சொந்த ஒப்பந்தத்தை விட மிகக்  குறைந்த தொகைக்கு இது எவ்வாறு கையகப்படுத்தப்பட்டது?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். “நாடாளுமன்றக் கூட்டுக்குழு தான் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்ட எதிரிகளிடம் சமத்துவத்தை எப்படி எதிர்பார்ப்பது?

அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரி களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கி விட்டு, அரசியலமைப்புச் சட்டம் கூறும் சமத்துவம் இல்லை என்று  புலம்பினால் எப்படி? என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி யுள்ளார். பெங்களூருவில் பேராசிரியா் சித்த லிங்கையா சிலையைத் திறந்துவைத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது இதுபற்றி பேசிய அவர், “உழைக்கும் மக்களிடம் பணம் இருந் தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்  சிக்கு உதவியாக இருக்கும். வெறும்  அதானி - அம்பானி மட்டும் சம்பாதித்தால்  யாருக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.  “அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகளிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கி விட்டு, சமத்துவம்பேணப்படவில்லை என்று புலம்பினால் எப்படியோ, அதே போலத்தான் அதானி - அம்பானி மட்டும்  சம்பாதிக்க வழிவகுக்கும் பாஜக-வினரை  மத்தியில் ஆட்சியில் அமரவைத்து  விட்டு, ஏழைகள், நடுத்தர மக்கள் முன்  னேற வேண்டுமானால், அது எப்படி சாத்தியம்?” என்றார்

சொத்துக்கள் ஏலம்: வணிக வரித்துறைக்கு ரூ.3.90 கோடி வசூல்

சென்னை, ஆக.26- வரி செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை ஏலம் விட்டு, ரூ.3.90 கோடி வசூலித்து இருப்பதாக, வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வணிக வரி  ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  சென்னை வடக்கு கோட்டத்தில், ‘மோனிகா மெட்டல்ஸ்’ என்ற நிறுவனத்தில், 2012 இல் திடீர் ஆய்வு  செய்யப்பட்டது. அப்போது, போலி  ரசீதுகள் வாயிலாக, அதிக உள்ளீட்டு  வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பத்து ஆண்டுகளாக வரி பாக்கியை செலுத்தாததால், சவுகார்பேட்டையில் உள்ள நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ஏல நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டது. பின்பு, ஜூலை 21ல் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. இதன் வாயிலாக, அரசுக்கு வர வேண்டிய, ரூ.3.90 கோடி  வரி பாக்கி வசூல் செய்யப் பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் தலைமை செயலகம் அமைக்க கோரிக்கை

சென்னை, ஆக. 26- சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தோட்டத்தில், புதிய தலைமை செயலகத்தை அமைக்க வேண்டும்’ என, திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் தலை மையில், நிர்வாகிகள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, கலை இரவாக  நடத்தப்படும். விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பறை யாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு மற்றும் கருணாநிதி எழுதிய நாடகங்கள் நடத்தப்படும் சென்னை தலைமை செயலகம், இட நெருக்கடியால் சிரமப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், ஆளுநர்  மாளிகையின் தோட்டம் உள்ள பகுதி யில், புதிய தலைமை செயலகத்தை அமைக்க தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

ஜி.கே.மணிக்கு அறுவை சிகிச்சை

சென்னை, ஆக.26- பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ  தலைவரும் சட்டமன்ற குழுத் தலைவரு மான ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக  உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார். தொண்டை வலியில் பேச முடி யாமலும், தொடர் தலைவலி, தலை சுற்றல் ஆகியவற்றாலும் அவதிப் பட்டார்.  சிறப்பு மருத்துவர்கள் பரிசோ தனை செய்ததில் தொண்டை குரல் வளையில் ஏற்பட்டிருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என்றனர். இதை யடுத்து அவர் சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.  சனிக்கிழமை (ஆக.26) காலை 11 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதற்கு முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறி னார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரனி டம் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்பட விருக்கும் மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தார்.

எஸ்.ஐ. பணி எழுத்துத் தேர்வு: இன்று நிறைவு

சென்னை, ஆக.26- தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தொடங்கிய எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நிறை வடைகிறது. தமிழ்நாடு முழுவதும் 621 காவல்  உதவி ஆய்வாளர் காலிப் பணி யிடங்களுக்கு மொத்தம் 1,86,610 பேர் விண்ணப்பித்துள்ளனர். வெள்ளியன்று (ஆக.25) எழுத்துத் தேர்வு தொடங்கியது. இதில் பொது பிரிவினர் கலந்து கொண்டனர். காவல்துறை ஒதுக்கீட்டில் விண் ணப்பித்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை (ஆக.27) நடைபெறுகிறது. 

புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை 2025ல் முடிக்க திட்டம்

சென்னை, ஆக. 26- புதுச்சேரி ரயில் நிலை யத்தை ரூ.93 கோடி ரூபாயில்  மேம்படுத்தும் பணிகள் வரும் 2025 இல் ஆகஸ்டில் முடியும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயின் மறுசீர மைப்பு திட்டத்தில், தெற்கு ரயில்வேயில், எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, கேரளாவில் எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலை யங்களையும் மேம்படுத்த உள்ளன. இந்நிலையில், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும், புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ. 93 கோடி யில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 6 ஆம் தேதி காணொலி மூலம் துவக்கி வைத்தார். கட்டிடங்கள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம், டிக் கெட் பரிசோதகர்கள் அலு வலகம், ரயில் ஓட்டுநர் ஓய்வு  அறைகள் உள்ளிட்ட கட்டு மான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல், பயணியர் காத்திருப்பு அறைகள், நடைமேம்பாலம், லிப்ட், எஸ்கலேட்டர், உண வகங்கள், வணிக வளாகம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்த பணிகளும் வரும் 2025 ஆகஸ்ட்டில் முடித்து, பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

விசுவாசப் பிரமாணத்தில் கையெழுத்திட  வாக்னர்  குழுவிற்கு புடின் அழைப்பு

மாஸ்கோ, ஆக.26- வாக்னர் கூலிப்படையின்  தலைவ ரான யெவ்ஜெனி பிரிகோஜின் மாஸ் கோவில் இருந்து செயின்ட்  பீட்டர்ஸ் பர்க் நோக்கி எம்ப்பேர் லெகஸி-600 விமானத்தில் பயணம் செய்த போது விமானம் விபத்திற்கு உள்ளாகி மர ணமடைந்தார். அதைத் தொடர்ந்து விசு வாச உறுதிமொழியில் கையெழுத்திடு மாறு வாக்னர்  குழுவிற்கு ரஷ்ய ஜனாதி பதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். அந்த விமானம் ஏவுகணை தாக்கு தல் மூலம் வீழ்த்தப்பட்டு இருக்க லாம் என்றும் கூறப்பட்டது.எனவே பிரி கோஜின் மரணத்திற்கு ரஷ்ய ஜனாதி பதி காரணமாக இருக்கலாம் என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுப்பிய சந்தேகத்திற்கு கிரெம்ளின்  மாளிகை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சில மாற்றத்தைக் கொண்டுவரும் ஆணை யில் புடின் கையெழுத்திட்டார். முழு மையான விசாரணை இன்றி மரணத் திற்கான காரணத்தை கூற முடியாது என்று கூறிய புடின், விசுவாச உறுதிமொழியில் கையெழுத்திடு மாறு வாக்னர் குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரிகோஜின் மரணம் உறுதி செய் யப்பட்டு இருந்தால் மீண்டும் நீதி கேட்டு ரஷ்யாவை நோக்கி படையை வழிநடத்துவோம் என்று வாக்னர் குழு அறிவித்து இருந்தது குறிப்பி டத்தக்கது.