states

மதத்தின் பெயரில் கலவரத்தில் ஈடுபட்டால் தண்டனை நிச்சயம்!

சென்னை, மே 10- “மத வெறியைத் தூண்டவும் கல வரத்தை ஏற்படுத்தவும் தமிழ் மண்ணில் இடமளிக்க முடியாது;” என்றும் “அப்படி முயன்றால்  தண்டனை நிச்சயம்” என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதங்களுக்கு பதிலளித்து பேசுகை யில், இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:  காவல் துறை என்பது குற்றங்களே நடக்காத வகையில் சூழ்நிலையை உரு வாக்கித் தரக்கூடிய துறையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அரசின் கொள்கை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிடக் குற்றமே நடை பெறாத சூழலை உருவாக்கும் துறை யாக அது மாற வேண்டும். எந்தச் சூழ லிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவா காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல் கள் உருவாக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.  மத துவேஷங்கள், தீவிரவாதச் செயல் களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மதம், சாதி வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும். இப்போது இந்த வன்முறைப் பேச்சுக்கள் இணையதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இம்மாதிரியான ஆட்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.  எத்தனை சக்திகள் முயன்றாலும் சாதி, மத மோதல் இன்றி சமூக நல்லிணக்கத் தோட்டமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், மத  மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக  இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு  அடக்கப்படுவார்கள். மத துவேஷங் களுக்கு தமிழ் மண்ணில் இடமளிக்க முடி யாது. அப்படி முயலுவோர் சட்டத்தின்  தண்டனையை நிச்சயம் அனுபவிக்கக் கூடிய சூழலை இந்த அரசு நிச்சயம் உரு வாக்கும்.  கூலிப்படை வைத்திருப்பதைத் தொழி லாகக் கொண்டவர்கள் முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும். கள்ளச்சாராயச் சாவுகள் இல்லாத தமிழகமாக மாறிட வேண்டும்; அதை  காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும்.  இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.