சென்னை, ஜூன் 3- தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலா ளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- ஏழ்மையான குடும்ப பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவ னத்தில் கொண்டும், குடும்ப வறுமை காரண மாக குழந்தைகளின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கத்தோடும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வரவேற்பு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அரசு ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி கொடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. மேலும், ஆரம்பப் பள்ளி மாணவர்க ளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். கொரோனோ பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் வேலையின்மையும், வருமானமின்மையும், வறுமையும் அதி கரித்து வருவதாக பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பிரதானமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக உள்ளது. அதே நேரம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்தினால் பயன்பெற முடியாத நிலை உள்ளது. எனவே, 11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் ஆரோக்கியம், மற்றும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மதிய உணவு திட்டத்தை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.