மலப்புரம், நவ.29- “முதல்வரையும் அமைச்சர்களை யும் சந்திக்க வேண்டும். உதவிக்கு நன்றி சொல்லணும்’’ என்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த கார்வான் கல்லில் வசிக்கும் பி.ஜீனத் கூறினார். கோவிட் காலத்தில் பயணமும் சிகிச்சையும் நெருக்கடியான போதும் புற்றுநோயை எதிர்கொண்டு உயிர்வாழ வலிமையை ஊட்டிய அரசாங்கத்தின் மீதான அன்பு அவரது வார்த்தைகளில் தெரிந்தது. அதிகம் வெளியில் செல்வதில்லை என்றாலும், அதே கனவோடு வேங்கரையில் புதிய கேரளம் சங்க மத்துக்கு சக்கர நாற்காலியில் வந்திருந்தார் ஷைலஜா. இறுதியாக முதல்வர் பினராயி விஜயனின் கை களைப் பிடித்ததும் அவர் கண்களில் மகிழ்ச்சி பரவியது. அவர் உலகுக்கு பறைசாற்றினார் ‘இது எங்களின் அரசு’ என்று. 19 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு நடந்த அறுவை சிகிச்சை காரணமாக ஜுனத் தனது கால்களின் செயற்பாட்டை இழந்தார். கருப்பை புற்றுநோய் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்ட றியப்பட்டது. இது மூன்றாவது நிலை. கோவிட் பெருந்தொற்று காலம் என்ப தால் ஆர்சிசி (மண்டல புற்றுநோய் மையம் -திருவனந்தபுரம்) போன்ற இடங்களுக்குச் செல்ல முடிய வில்லை. அவருக்கு மிம்ஸ் மருத்து வமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. ரூ.1.5 லட்சம் அரசு உதவி கிடைத்தது. அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. உதவி கோரி மனு வும் அளிக்கப்பட்டுள்ளது. “உடல் நலன் குறித்து முதல்வர் விசாரித்தார். எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என்றார். மிக்க மகிழ்ச்சி- என்று 45 வயதான ஜீனத் கூறினார். அவர் தனது கணவர் அப்துல் பஷீருடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பிறவி மாற்றுத்திறனாளி ஷைலஜா. அமைச்சர்கள் எல்லாம் நம்மிடம் வருகிறார்கள். அவர்களை யெல்லாம் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஓய்வூதியம் போன்றவை பெரும் ஆறுதலாக உள்ளன. முதல்வரை சந்தித்து கைகுலுக்கியதில் மிகுந்த மகிழ்ச்சி என்று ஷைலஜா கூறினார். பிறர் உதவியின்றி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும் என்பது கனவாகவே உள்ளது என்றார். அவர் தனது சகோ தரர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.