states

தனியார் கல்வி ஆதிக்கம்

நாகைமாலி: தமிழ்நாட்டில் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், சட்டம், மருத்துவம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் என ஒட்டு மொத்தமாக 2608  கல்லூரிகள் உள்ளன. இதில் 357 கல்லூரிகள்  அரசுக் கல்லூரிகள். 251 கல்லூரிகள் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள். மீதி யுள்ள 2000 கல்லூரிகள் தனியார் சுயநிதிக் கல்லூரிகளாகும். உயர் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்கள் தான் மிக அதிகம்.

மறுக்கப்படும் சலுகைகள்

தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட 2000 தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 251  அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் சுயநிதி பிரிவிலும் ஆக கூடுதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் எந்தவித  பணிப் பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு விடுப்பு போன்ற வைகளும் மறுக்கப்படுகின்றன. பலருக்கு சமூக பாதுகாப்பு பலன்களான இ.பி.எப். போன்றவைகள் கூட மறுக்கப்படுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிவதற் கான அனைத்து தகுதிகளும் இவர்களுக் கிருந்தும் ரூ. 10,000-க்கும் குறைவாகவே சம்பளம் பெற்று பலரும் பணியாற்றுகின்ற னர். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) போன்ற உயர் கல்வி நெறிமுறைப்படுத்தும் நிறுவனங்கள் பணியாளர்களின் சான்று சரிபார்த்து விட்டு பணியாளரிடமே திருப்பி அளிக்க வேண்டுமென்று பல முறை வலியுறுத்திய பிறகும் தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங் கள் தொடர்ந்து தங்களுடைய பணியாளர்க ளின் சான்றிதழ்களை தங்களிடமே வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நமது கல்லூரி கல்வி இயக்குநரகம் சான்றிதழ்களை பேராசிரியர்களிடம் திருப்பி அளிக்குமாறு கல்லூரிகளுக்கு கடிதம் எழுதியும், பல கல்லூரி நிர்வாகங்கள் சான்று  தர மறுப்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாமல் பணிபுரியும் இப்பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1976 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் தற்போதுள்ள “தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டம்”. இது தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும், உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் சுயநிதிப்பிரிவு ஆசிரியர் பணியாளர்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டுகிறோம்.  தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும்  அலுவலர்கள் கல்லூரி கல்வி இயக்குநரகம் போன்ற அலுவலகங்களை அணுகுவதில் கல்லூரி நிர்வாகங்களின் மூலம் சில தடை கள் ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

தனியார் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும்  அலுவலர்களுக்கு “குறைந்தபட்ச சம்பளம்” என்ற ஒன்றினை அரசு நிர்ணயிக்க வேண்டும். விடுப்பு, சமூகப் பாதுகாப்பு போன்ற அனைத்து சலுகைகளையும் அரசு ஊழியர்க ளுக்கு இணையாக வழங்க வேண்டும். கல்லூரிகளில் பணி புரிந்ததற்கான பணி அனுபவச் சான்றிதழ் கேட்கிற போது பெரும் பான்மையான கல்வி நிறுவனங்கள் மறுப்பதும், இதற்காக பல மாத ஊதியத்தை கேட்பதும் என்ற நிலை தொடர்கிறது. கொரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி பெரும்பாலான தனியார் கல்வி நிறு வனங்கள் முழுமையாக சம்பளம் வழங்க வில்லை. முன்னறிவிப்பின்றி பலரும் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அண்ணா பல்கலை.யில் அவுட்சோர்சிங்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் பாரம்பரியமான தொழில் நுட்ப நிறுவனமாகும். இதன் வளர்ச்சி உலகப்புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்க ளுடன் கூட்டான பயிற்சி வகுப்புகளை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் தினக் கூலி  அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியரல்லாத தொழில் நுட்ப ஊழியர்களை அவுட்சோர் சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 10 முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்து  வரும் சுமார் 500 ஊழியர்கள் பல்கலைக்கழ கத்தின் மேற்படி முடிவு காரணமாக வேலை யிழக்கும் நிலை உள்ளது. இவைகளில் பெரும்பான்மையோர் பி.இ. போன்ற பட்டம் பெற்றவர்கள். இனி இவர்கள் வெளியில் வேலை தேடும் வாய்ப்பில்லாதவர்களாக உள்ளனர். எனவே, பல்கலைக்கழகம் மேற்படி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுகிறேன்.