சிம்லா, மே 31- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு திங்கள்கிழமையுடன் (மே 30) எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சி திட்ட மிட்டு உள்ளது. அதன் ஒருபகுதியாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கான 11-ஆவது நிதி தவ ணைத் திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு அந்நிய முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளது. இது மிகப்பெரியசாதனை. இந்தியாவில் வறுமை குறைந்து வருவதை சர்வதேச நிறுவனங்களும் கூட ஏற்றுக்கொண்டுள்ளன. நாட்டில் வாக்கு வங்கி அரசியல் பல பத்தாண்டுகளாக நடந்து வரு கிறது. சொந்த வாக்கு வங்கியை உரு வாக்கும் அரசியல் நாட்டிற்கு பெரும் சேதத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பாடுபடுவது வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக அல்ல, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக. 100 சதவீத பலன்களும் மக்களை சென்றடைவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றார்.