புதுதில்லி, அக்.3- கடந்த ஓராண்டில் மட்டும் அரிசி, கோதுமை, ஆட்டா ஆகியவற்றின் விலைகள் 8 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்வை சந்தித்துள்ளது. கடந்த வாரத் தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 36 ரூபாய் 20 காசுகளை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் விலை யை விட சுமார் 19 சதவிகிதம் அதிகம் ஆகும். கோதுமையின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை விலைகள் குறித்து நுகர் வோர் விவகார அமைச்சகம் சேகரித்த தரவுகளின்படி, கோதுமையின் சில்லரை விற்பனை விலை 14 சத விகிதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை 27 ரூபாயிலிருந்து 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் அரிசியின் சராசரி சில்லரை விலையும் கிலோ 38 ரூபாய் 20 காசு களாக உயர்ந்துள்ளது. இது வும் கடந்த ஆண்டைக் காட்டி லும் 8 சதவிகிதம் அதிகமாகும். வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (Repo Rate) 0.50 சதவிகிதம் உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெள் ளிக்கிழமை அறிவித்தது. அப்போது பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தானியங்களின் விலை உயர்வு குறித்து குறிப்பிட்டார். உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. நெல் உற்பத்தி குறைவ தால் கோதுமை நுகர்வு அதி கரிக்கும். இதனால், கோதுமை விலை உயரும். பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காய்கறிகள் குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவுப் பொருட்களின் விலை உயர்வு பணவீக்க எதிர்பார்ப்புகளில் பாதக மான தாக்கத்தை ஏற்படுத் தக்கூடும்” என்றார். எனவே, இது வரு மாண்டுகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தி யாவசிய உணவுப் பொருட் களின் விலைகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விலைவாசி உயரும் என்று சந்தை வல்லுநர்கள் எச்ச ரிக்கின்றனர்.