புதுதில்லி, ஏப். 20 - நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த இந்திய குற்றவியல் நடை முறை (அடையாளம்) சட்ட மசோதாவிற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1920-ஆம் ஆண்டு குற்ற வியல் நடைமுறைச் சட்டங்கள் மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 102 ஆண்டுகளாக இந்தச் சட்டம் அமலில் இருந்த நிலையில், அண்மையில், இந்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, புதிதாக இந்திய குற்றவியல் நடைமுறை (அடையாள) மசோதா ஒன்றை ஒன்றிய பாஜக அரசு அண்மை யில் கொண்டு வந்தது. அதாவது, 1920-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி (அல்லது) குற்றங்கள் புரிவதை வழக்கமாக கொண்டு, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நன்ன டத்தைக்கான பிணை பெற்ற நபர், குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் குற்றங்களில் கைது செய்யப்பட்ட நபர் ஆகியோரிடம் இருந்து மட்டுமே கைவிரல் ரேகைகள் மற்றும் கால்தட ரேகைகளைப் பதிவு செய்ய முடியும் என்று இருந்தது.
ஆனால், மோடி அரசோ, இந்தி யக் குற்றவியல் நடைமுறைச் சட்ட த்தின் கீழ் கைது செய்யப்பட்ட வர்கள், நீதிமன்றத்தால் தண்ட னை பெற்றவர்கள், தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சிறைவைக்கப் பட்டவர்கள் என அனைவரது கை விரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவு கள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் (குருதி, வெள்ளைத் திரவம், தலை முடி மாதிரிகள்) மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமித்து வைப்ப தற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரி களுக்கு அனுமதி வழங்குகிறது. பெண்கள் அல்லது குழந்தை களுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தவிர, வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த சட்ட முன்மொழிவின் கீழ் அவரது உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க மறுக்கலாம் (கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள் எடுப்பதை மறுக்க முடியாது) என இச்சட்டம் கூறினாலும், இந்தச் சட்டம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கண்டனங்கள் எழுந்தன.
1920 வருட சட்டம் குற்ற வாளியின் அடையாளங்களை ஆவணப்படுத்த மட்டுமே அனுமதி வழங்குகிறது. ஆனால், தற்போதைய மோடி அரசின் சட்டம் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு வரே தமக்கெதிராக சாட்சிய மளிக்க (உயிரியல் மாதிரி களை பகுப்பாய்வு செய்ய அனு மதிப்பதன் மூலம் ) நிர்பந்திக்கிறது. இது, அரசியல் அமைப்பு பிரிவு 20(3)க்கு எதிரானது. அடிப்படை உரிமைக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன. பிரிவு 21-ன் கீழ் ஒருவரது உயிரோ உடல்சார் உரிமையோ, சட்டம் விதித்தமைத்துள்ள நெறி முறைப்படி அன்றி, பறிக்கப்படு தல் ஆகாது. 2010-இல் கர்நாடக மாநி லம் தொடர்புடைய வழக்கில், தீர்ப் பளித்த உச்சநீதிமன்றம், “எந்த வொரு தனிநபரையும் தனக்கெதிர் சான்றளிப்பவராக நிர்பந்திக்கக் கூடாது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்னனுமதி இல்லாமல், போதைப்பொருள் பகுப்பாய்வு, பாலிகிராஃப் பரிசோதனை மற்றும் மூளை மின் செயல்படுத்தல் சுய விவரம் (BEAP) சோதனை (Narcoanalysis, Polygraph Examination and the Brain Electrical Activation Profile -BEAP - Test) போன்ற எந்தவித சோதனைகளும் மேற்கொள்ளக் கூடாது என்பதை உறுதிப்படுத்தி யும் உள்ளது. அதுமட்டுமல்ல, ஒருவர் தானாக, முன்வந்து சோத னை மேற்கொண்டாலும், அதை சாட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வழக்கு விசாரணையின் போது மவுனம் கடைபிடிப்பது கூட அடிப்படை உரிமைதான் என்று குறிப்பிட்டது. இவற்றையும் எதிர்க்கட்சிகள் எடுத்துரைத்தன.
ஆனால், அவை அனைத்தை யும் மீறி, குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா- 2022ஐ, கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி மக்களவையிலும், 6-ஆம் தேதி மாநிலங்களவையிலும் மோடி அரசு நிறைவேற்றியது. அதனைக் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும், மோடி அரசின் குற்ற வியல் நடைமுறை அடையாள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் ஒப்புதல் வழங்கியுள்ளார்.