பெய்ஜிங், ஏப்.1- ஒரு சிக்கலான மற்றும் அதிர்வலை கள் அதிகரித்துள்ள சூழலில் உலகம் இருக்கையில் சர்வதேச சமூகம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓரிரண்டு மாதங்களில் பல்வேறு நாடுகளின் தலைவர்களோடு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக வும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உரை யாடி வந்தார். அனைத்துத் தலை வர்களுடனான கலந்துரையாடல் களும் கொரோனாவால் எழுந்துள்ள சவாலைச் சந்திப்பது மற்றும் ரஷ்ய- உக்ரைன் மோதல் ஆகிய இரண்டை யும் பற்றியே இருந்தது. இதில் சீனா எந்தத் தரப்பில் நிற்கிறது உள்ளிட்ட கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.
அமெரிக்கா போன்ற நாடுகளி டம் இருந்து மிரட்டல்களும் வந்தன. சர்வதேசத் தலைவர்களுடன் ஜி ஜின்பிங் பேசுகையில், ஒரு விஷ யத்தைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்தார். தற்போதுள்ள சூழலில் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. உண்மையான சர்வதேசி யத்தை சீனா எப்போதும் ஆதரிக்கும். சர்வதேச நீதி உறுதிப்படுத்த நாங்கள் முழுமையாக உழைப்போம் என்று அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கிய நிலையில், அதை எதிர்கொள்வதில் சீனா முக்கியப் பங்காற்றியது. ஜி ஜின்பிங்கின் சந்திப்புகள் பற்றி சீன அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், ‘‘உலக வரலாற்றில் சரியான பக்கத் தில் சீனா உறுதியாக நிற்கிறது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாது காப்பதில் சீனா பங்களிப்பு முக்கிய மானதாகும்.
கொரோனா பெருந் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி களை உலகம் முழுவதும் விநியோ கம் செய்துள்ளோம். இதுவரையில் 120 நாடுகளுக்கு 210 கோடி தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்பட்டி ருக்கிறது. ரஷ்ய-உக்ரைன் மோதலில் சீனாவின் நிலைப்பாடு குறித்து அனைத்துத் தலைவர்களும் பேசி னார்கள். இதற்குப் பதிலளித்த ஜி ஜின்பிங், ‘‘தொடக்கத்திலிருந்தே சம் பந்தப்பட்ட அனைவரும் மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு பேச்சு வார்த்தையைத் துவங்க வேண்டும் என்றுதான் சீனா கூறி வருகிறது. இது தான் மனிதாபிமான ரீதியிலான நெருக் கடியைத் தவிர்க்க உதவும்’’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மனிதாபி மான ரீதியில் உக்ரைனுக்கு நிவா ரணப் பொருட்களை அனுப்பியிருப்ப தையும் அவர் சுட்டிகாட்டியிருக்கிறார்.