states

குடியரசுத் தலைவர் வருகையால் புதுச்சேரியில் வாய்க்காலுக்கு திரைச்சீலை

புதுச்சேரி, ஆக.6-  குடியரசுத் தலைவர் வருகையால்  புதுச்சேரியில் வாய்க்காலுக்கு திரைச்சீலை அமைத்து ‘அலங்கரித்துள்ளது’ ரங்கசாமி-பாஜக அரசு. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு இன்று வருகிறார். ஜிப்மரில் ரூ.17 கோடி யில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்று நோய்க்கான நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். வில்லியனூரில் 50 படுக் கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவ மனையை திறந்து வைக்கிறார்.குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாது காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  உப்பனாறு வாய்க்காலில் 15 ஆண்டு களாக பாலம் கட்டுமானப்பணி மந்தமாக நடந்து வருகிறது. இவ்வாய்க்காலும் மோசமான நிலையில் உள்ளது. குடியர சுத்தலைவர் அவ்வழியாக செல்வதால், வாய்க்காலும், நிலுவையிலுள்ள பாலம் கட்டுமானப்பணி தெரியாமல் இருக்க தடுப்புக்கட்டை அமைத்து தீரைச்சீலை போட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர்.