சென்னை,ஜூலை 15- திரைத்துறையில் பன்முகம் கொண்ட நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன்(69) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளி யன்று(ஜூலை 15) உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரதாப் போத்தன் 1979இல் வெளி வந்த அழியாத கோலங்கள் என்கிற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிக ளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்க ளில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் குறிப்பாக, பாலு மகேந்திரா இயக்கிய மூடுபனி, மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் வறுமையின் நிறம் சிகப்பு ஆகிய திரைப்படங்களில் பிர தாப் போத்தன் நடிப்பு பெரிதும் பேசப் பட்டது. கமல்ஹாசனுடன் பிரதாப் போத்தன் நடித்த பேசும் படம் (உரை யாடல்கள் இல்லாத படம்) மக்க ளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். “மீண்டும் ஒரு காதல் கதை” சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். “கரையெல்லாம் செண்பகப்பூ” என்னும் சுஜாதாவின் நாவலை பட மாக்கியுள்ளார். சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண் டன், மகுடம், ஆத்மா, உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள் ளார். வெற்றி விழா திரைப் படத்தில் முதன்முதலாக ஸ்டெடி கேமரா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மலையாளத்தில் தாகரா, சாமரம், லாரி என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பிரதாப் போத்தன் கடைசியாக இயக்கிய தமிழ் திரைப் படம் ‘லக்கி மேன்’. ராம், படிக்காத வன், ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரதாப்போத்தன் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.