states

கொடநாடு கொலை வழக்கு விசாரணை தொடர்கிறது

ராமநவமி அன்று திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கிரிமினல் வன்முறையை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகளை கடுமையாக தண்டியுங்கள். பிரதமரின் மவுனம் மதப்பிளவுவாத வன்முறையாளர்கள், ஆட்சியாளர்களின் எத்தகைய ஆதரவைப் பெற்றுள்ளார்கள் என்பதை பறைசாற்றுகிறது. வன்முறையாளர்களை நிராகரியுங்கள். அமைதியையும் மத ஒற்றுமையையும் உயர்த்திப் பிடியுங்கள்.
 

அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாக்க 13 எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மதவாத வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை வற்புறுத்துகிறோம். பிரதமரின் அமைதி, வன்முறையாளர்கள் கொண்ட கும்பல் அதிகாரத்தில் இருப்போரின் ஆதரவை பெற்றுள்ளனர் என்பதற்கு வலுவான நிரூபணம்.

நமது மக்களிடையே பசி/பட்டினி அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்த சர்வதேச குறியீடு பட்டியலில் இந்தியாவின் இடம் தொடர்ந்து சரிகிறது! ஆனால் மோடி அரசாங்கம் லட்சக்கணக்கான டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யத் தயார் என அறிவிக்கிறது. நமது மக்கள் பசியில் வாடும் பொழுது லாபக் கொள்ளை அடிக்க மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது! உயிர்களை பாதுகாக்க நமது மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குங்கள்.

விலைவாசி உயர்வு காரணாமாக நடுத்தர/ஏழை குடும்பங்கள் கடும் திணறலில் சிக்கியுள்ளன. மோடி அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளிவிட்ட அதே சமயத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டது. வானம் நோக்கி உயரும் விலைவாசி  மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது. இதன் விளைவாக உற்பத்தி பொருட்களை வாங்குவதை மக்கள் குறைத்துக் கொள்கின்றனர்.  இது பொருள் உற்பத்தியை வீழ்ச்சி அடைய வைக்கிறது. வேலைவாய்ப்புகளும் பாதிக்கின்றன. அரசு முதலீடுகளை அதிகரியுங்கள். வேலைவாய்ப்புகளை பெருக்குங்கள்.

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury