states

நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கும் பிரதமர் மோடி; இரு அவைகளும் 7-வது நாளாக முடங்கின!

புதுதில்லி, ஜூலை 28 - மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க மறுத்து பிடிவாதமாக இருப்பதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொட ர்ந்து 7-ஆவது வெள்ளிக்கிழமை யன்றும் நாள் முழுவதும் முடங்கின.  மாநிலங்களவை தொடங்கியதும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிறந்த நாள் கொண்டாடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஒய்வுபெற இருக்கும் உறுப்பினருக்கு பிரியா விடை குறிப்பும் வாசித்தார். அதனைத் தொடர்ந்து அவைக்கு, விதி எண் 267-இன் கீழ் மணிப்பூர் குறித்து விவாதிக்க 47 நோட்டீஸ் வந்துள்ள தாக தெரிவித்தார்.  இந்த விவகாரத்தில் குறுகிய கால விவாதத்தை மட்டுமே தான் ஏற்றுக் கொண்டதாகவும், அதனையே அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறிய மாநிலங்களவைத் தலைவர், கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு, இந்த விஷயத்தில்தான் ஏற்றுக் கொண்டது போல குறுகிய கால விவாதத்திற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண் டார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரையன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, தனது தலைமைக்கு மரியாதை தருமாறு, ஜகதீப் தன்கர் அவரை கண்டிக்கவே மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அவை யை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக ஜகதீப் தன்கர் அறி வித்தார். இதேபோல மக்களவை நட வடிக்கைகள் தொடங்கிய 3 நிமிடத்தி லேயே, நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா காலை 11 மணிக்கு கேள்வி  நேரத்துடன் அவையை துவங்கினார். அப்போது, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பிரதமர் மோடி அவைக்கு வரவேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து நண்பகல் 12 மணிவரை அவை நடவடிக்கை களை ஒத்திவைப்பதாக அறிவித்து  சபாநயாகர் ஓம் பிர்லா வெளியேறி னார். பின்னர் நாள் முழுவதுமே மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை வழக்கம்போல் காலை 11 மாநிலங்களவை கூடும் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.