பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8-இல் வெளியீடு
சென்னை, ஏப்.26 - தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8 ஆம் தேதி வெளி யிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், “பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரி யில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல் : 10 காவலர்கள் உள்பட 11 பேர் பலி
ராய்ப்பூர், ஏப்.26- சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்ப தாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல்படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்குசென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்பிய போது அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பெகல், “காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நக்சல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் விட மாட்டோம்”’ என்றார். சம்பவம் நிகழ்ந்த இடம், தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாவட்ட காவல் படை, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள மாவோஸ்டு களின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில், அம்மாநில காவல் துறையால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.299 கோடி ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை யிலான சுரங்கப்பாதை, உயர்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல் தொடர்பான அனைத்து பணி களுக்கும் லார்சன் & டூப்ரோ என்ற நிறுவனத்திற்கு ரூ.299.46 கோடி அளவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்திய வழக்கு சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை
சிங்கப்பூர், ஏப்.26 - ஒரு கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா. தமிழரான இவர் 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். மேலும் கஞ்சா கடத்திய வழக்கில் 2018 ஆம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது சிங்கப்பூர் அரசு. இவரது மரண தண்டனை சிங்கப்பூரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் “தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலே தங்கராஜு குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது தொலைபேசி அழைப்புகளே இதற்கு சான்று” என்று சிங்கப்பூர் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பலமில்லாத சாட்சிகள் இருந்தன. தங்கராஜூவுக்கு போதிய சட்ட உதவிகள் செய்யப்பட வில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு மரண தண்டனை வழங்கு வது, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி யது. ஐக்கிய நாடுகள் சபையும் தங்கராஜுவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. இந்நிலையில் தான் தங்கராஜு சுப்பையாவுக்கு சாங்கி சிறைச்சாலையில் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் சுப்பையாவின் இறப்புச் சான்றிதழையும் சிங்கப்பூர் அரசு வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆசிய கண்டத்திலேயே அதிக அளவில் மரண தண்ட னைகள் சிங்கப்பூரில்தான் நிறைவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை
சென்னை,ஏப்.26- அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரி சோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இதில், தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு பணி வழங்கப்படும் என்று இது தொடர் பான அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டு களுக்கு ஒருமுறை மருத்துவப் பரி சோதனை நடத்த மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, கண், காது உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 50 வயதுக்கு குறை வானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவப் பரிசோதனை யில், ஒரு ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்று மருத்துவர் சான்று அளி த்தால், அவர்களுக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.
பிரகாஷ் சிங் பாதல் மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை,ஏப்.26- பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில்,”நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பிரகாஷ் சிங் பாதல் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்த மடைந்தேன். ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்து அம்மாநில நலனில் மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவரது பங்களிப்புகளை அம்மாநில மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருமே எந்நாளும் நினைவு கூர்வர். அவரைப் பிரிந்து வாடும் குடும் பத்தினருக்கும், பஞ்சாப் மாநில மக்களுக்கும், சிரோமணி அகாலி தளம் கட்சியினருக்கும் தமிழக மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறு தலையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி திடீர் தில்லி பயணம்
சென்னை,ஏப்.26- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை திடீரென தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முதலில் அவரது பயணம் தனிப் பட்ட விஷயங்களுக்கானது என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரி வித்தன. தில்லி சென்றுள்ள ஆளுநர் அங்கு யார்-யாரை சந்தித்து பேசு வார் என்பது பற்றி அறிவிக்கப்பட வில்லை. ஆளுநர் மாளிகை வட்டா ரங்களில் இதுபற்றி விசாரித்தபோது முழுமையான தகவல்கள் தெரி விக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் தில்லியில் 3 நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவில்தான் அவர் தமிழகம் திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்த 3 நாட்களும் அவரது தில்லி பயண விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தில்லியில் சட்ட அமைச்சகம் உள்பட சில ஒன்றிய அமைச்சக உயர் அதிகாரி களுடனும் அவர் ஆலோசனை நடத்து வார் என்று தெரிய வந்துள்ளது.
ஒலிப்பதிவு சர்ச்சை: நிதியமைச்சர் விளக்கம்
சென்னை, ஏப்.26- ஆடியோ சர்ச்சை தொடர்பாக நிதி யமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாக, ஆலோச கராக உறுதுணையாக இருப்பவர் சபரீசன். உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மீது எதிர்க் கட்சிகள் கூட குற்றச்சாட்டுகள் வைக்காத நிலையில், இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. சமூகவலைத்தளத்தில் பரவிவரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. நவீன தொழில் நுட்பத்தை மலி வான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட் டுள்ளனர். இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்திய வர்களில் நானும் ஒருவன். இவர்கள் மீது களங்கம் சுமத்த இது போன்ற ஜோடிக்கப் பட்ட ஆடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. திராவிடமாடலை ஜீரணிக்க முடியாத தால் மலிவான தந்திரங்கள் கொண்டு போலியான ஒலிப்பதிவை வெளியிடு கின்றனர். என்னை பிரிப்பதன் மூலம் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கும் பிளாக்மெயில் கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பமாக இயங்கி வரு கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
தக்காளி விலை சரிவு
சென்னை, ஏப்.26- சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்காக தின மும் 10 லட்சம் கிலோ தக்காளி தேவைப்படுகிறது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங் கள் மற்றும் ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வருகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதிக அளவில் தக்காளி வரு கிறது. தினமும் 12 லட்சம் கிலோ தக்காளி வருகிறது.
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு சசிகலாவிடம் விசாரிக்க சிபி-சிஐடி திட்டம்
சென்னை,ஏப்.26 நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவ ல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு களாக விசாரணை நடைபெற்று வரு கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் கண்காணிப்பாளர் முருக வேல் விசாரணை அதிகாரியாக நியமிக் கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது. நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசி கலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறு குட்டியை விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோதி டரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடநாடு வழக்கில் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதி டரை சந்தித்துள்ளார், கனகராஜை கடை சியாக சந்தித்துப் பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்புப் புல னாய்வுக்குழு முடிவு செய்துள்ளது.
குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் : சிபிஐ
சென்னை.ஏப்.26- குற்றச்செயல்களை இரும்புக் கரம் கொண்டு தமிழ்நாடு அரசு ஒடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தூத்துக்குடி மாவட்டம், கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (55) பணியில் இருந்த போது, பட்டப்பகலில் அவரது அலு வலகத்தில் அத்துமீறி நுழைந்து, அவரை விரட்டி, விரட்டி வெட்டிப் படு கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தையும், அச்சத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டுக் கும்பல் அதி காரத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவர்களது சட்டவிரோத, சமூக விரோதச் செயல்களுக்கு உடன் படாத, ஒத்துப்போகாத அரசுப் பணி யாளர்களை தாக்குவது, படுகொலை செய்வது அரசு கட்டமைப்பை நிலை குலைக்கும் கடுமையான குற்றச் செயலாகும். படுகொலைக்கு ஆளான கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். இது உயிர் பலி கொடுத் துள்ள, அந்தக் குடும்பத்தை அரவ ணைத்து ஆறுதல்படுத்தும் நல்ல அணுகுமுறைதான். ஆனால், அரசின் சட்ட விதிகளை பின்பற்றி, பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு பணி யாளர்களின் மன உறுதியை கடுமை யாக பாதிக்கும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மணல், மண் போன்ற இயற்கை வளக் கொள்ளைச் சம்பவங்கள் மட்டு மல்ல வேறு பல பிரிவுகளிலும் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச் செயல்களும் வெளிப்பட்டு வரு கின்றன என்பதை அரசு கவனிக்க வேண்டும் என்றும் அதில் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.