சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, நவ. 9 - தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் திற்கு தடை விதித்து கடந்த 2023 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டது. நீண்ட அழுத்தத்திற்குப் பிறகு, இந்தச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி, ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, ஆதிகேசவலு அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, வியாழனன்று தீர்ப்பு வழங்கி யுள்ளது. அதில், “அதிர்ஷ்டம் அடிப்படை யிலான ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டுக்களைத் தடை செய்தது செல்லும்” என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ‘திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளை யாட்டுக்களை தடை செய்யும் தமிழக அரசின் சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், எனினும், இந்த விளையாட்டுக்களை விளை யாடுவதற்கு வயது, நேரம் உள்ளி ட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்’ எனவும் தீர்ப்பளித்துள்ளது.