states

ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளை பிரிக்க திட்டம்

விழுப்புரம், மே 21 - தமிழகம் முழுவதும் 1,000 குடும்பஅட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேசன் கடை களை இரண்டாகப் பிரிக்க திட்ட மிடப் பட்டுள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரி வித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை  சார்பில் ஆய்வுப்பணி நடை பெற்றது. அப்போது,காணை அரசு  நேரடி நெல்கொள்முதல் நிலையம், காணைகுப்பத்தில் திறந்தவெளி நெல்சேகரிப்பு மையம், பெரும் பாக்கத்தில் நியாயவிலைக் கடை  ஆகியவற்றை உணவுத் துறை  அமைச்சர் சக்கரபாணி ஆய்வு  செய்தார். அவருடன் அமைச்சர் கள் பொன்முடி, மஸ்தான் உடனி ருந்தனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழகம் முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேசன் கடைகளை இரண்டாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். விழுப்புரம் மாவட்டத்தில் 68 பகுதிநேர புதிய ரேசன்கடைகள் வரும் ஜூலை மாதத்துக்குள் திறக் கப்படும் என்றும் தமிழகம் முழு வதும் 7 ஆயிரம் ரேசன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியைவிட, தற்போது தமிழகத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்று வரு கின்றனர். அங்கு தவறுகளை தடுக்க  பல்வேறு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளன. இதுவரை 56  பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 3 பேர் மீது விஜி லென்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

விரைவில் கூடுதல் சர்க்கரை, உளுந்து

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து  ஆகியவை விரைவில் வழங்கப் படும். பயோ மெட்ரிக் திட்டம் முழு மையாக நிறைவேற்றப் பட வில்லை. கண் கருவிழி மூலம் அடை யாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும்” என்றார்.