states

நகராட்சி பணி நியமனத்தில் வெளிமுகமை அரசாணையை ரத்து செய்யக் கோரிக்கை

மதுரை, ஜன.29- நகராட்சிப் பணியாளர்களை வெளி முகமைகள் மூலம் நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கா.முருகானந்தம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசாணை (நிலை)எண் 10  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறை நாள் 23.01.23 இன்படி ஒவ்வொரு  நிலையிலான நகராட்சிக்கும் ஒரே சீரான பணியிடங்கள் தோற்றுவிப்பதற்கான வரையறைகளை  உருவாக்குவதாக கூறப்பட்ட அரசாணையில் மக்கள்  தொகை வளர்ச்சிக்கேற்ப, எல்லைகள் விரிவாக்கத்திற்கு ஏற்ப பணி யிடங்களை தோற்றுவிக்காமல் ஆண்டு வருமானம் மட்டுமே கணக்கில்  கொள்ளப்படுகிறது.  மக்களுக்கான சேவையாற்றும் துறை என்பதை மறந்து, புதிதாக  இரண்டாம்  நிலை நகராட்சிகளாக தரம்  உயர்த்தப்பட்ட 70 இல் 31 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முதல் நிலை, தேர்வு நிலை, சிறப்பு நிலை நகராட்சிகளில் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்காமல் 472 பதவிகளை குறைத்து 1293  பதவிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது என்று கூறி இருக்கின்ற ஆட்களையும் குறைத்துள்ளனர்.   அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் ஓட்டுநர்கள், குடிநீர், தெருவிளக்கு பணியாளர்கள், இரவு காவலர்கள், சங்கிலியாளர்கள் உட்பட 4212 பணியிடங்களும் பொது  சுகாதார பிரிவு தூய்மை பணியாளர் கள் சுமார் 7 ஆயிரம் பேர் உள்ளிட்ட  அரசாணையில் இல்லாத மருத்துவ  பணியாளர்கள் உட்பட பிற பணியாளர் கள் அனைவரும் இனி வருங்காலத்தில் வெளி முகமைகள் (அவுட் சோர்சிங்) மூலமாக நியமிக்கப்படுவார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளதை வன்மையாக  கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.