states

img

தோழர் சங்கரய்யா: நூற்றாண்டை அர்த்தப்படுத்தும் போராளி!

புது நூற்றாண்டைக் காணும் மனிதர்கள் அபூர்வம்! அதனினும் அபூர்வம், அந்த நூற்றாண்டையே அர்த்தப்படுத்துவது போல வாழும் மனிதர்கள். அப்படியொரு மகத்தான மனிதர், தலைவர்தான் தோழர் என்.சங்கரய்யா. அவர் காலமானார் என்ற செய்தி மழையோடு வந்து சேர்ந்தது. எத்தனையோ பெரும் மழையையும், கடும் வெயிலையும், புயல்களையும் கண்ட பொது வாழ்வு அவருடையது என்பதை நினைத்தால் அவ்வ ளவு வியப்பாக இருக்கிறது. அதிகாரபீடத்துக்காகவோ,சுயநலத்துக்காகவோ  துளியும் சமரசம் செய்துகொள்ளாத, ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற சோஷலிசத்துக்கான இலக்கு ஒன்றையே மூலதனமாக்கிக்கொண்ட ஓர் உண்மை யான கம்யூனிஸ்ட்டின் போராட்ட வாழ்க்கை தோழர் என்.சங்கரய்யாவுடையது.  முதலாளித்துவமும், பணமும், அதிகார வன்மமும் தீர்மானிக்கும் இன்றைய தேர்தல் அர சியல் யுகத்தில், தோழர் சங்கரய்யாவின் வாழ்வும், அவரது அப்பழுக்கற்ற அரசியலும் வருங்காலத் தலைமுறைக்கென கல்வெட்டாக எழுந்து நிற்கிறது.  ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது பிறந்தவர்... முதலாளித்துவ, மதவாத அரசியலுக்கெதிரான ஜனநாயகப் போராட்டம் உச்சத்தில் இருக்கும்போது மறைந்திருக்கிறார். இடைப்பட்ட இந்த நூற்றாண் டில், விடுதலைப் போர் தொடங்கி இந்தித் திணிப்பு  எதிர்ப்பியக்கம், தொழிற்சங்க, விவசாய சங்கப் போராட்டங்கள் என எத்தனை எத்தனை போராட் டங்கள்... உடல் நலிவுற்ற நிலையிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை ஓயாத கலகக்காரரின் குரல் தோழர் சங்கரய்யாவுடையது.

அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளில் பல முக்கியமான கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கி றேன். ஒரு முறை, “இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் எங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “நாடு விடுதலையானபோது நானும் தோழர்களும் சிறையில் இருந்தோம். ஆகஸ்ட் 14-ம் தேதி இரவுதான் எங்களின் ஜெயில் கதவைத் திறந்துவிட்டார்கள்” என்று அவர் சிரித்தார்.  சுதந்திரப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்த சங்கரய்யா, நாடு விடுதலையான பிறகும் உழைப் பாளி மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்க ளில் ஈடுபட்டதற்காக நான்கு ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஒருவரின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமைக்குரியது. மதுரை மாநகரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மாணவர்களைத் திரட்டிய சங்கரய்யாவை, பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில், ஆங்கிலேய அரசு கைது செய்தது. அப்போது அவர், 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். அவரால் பட்டப்படிப்பை முடிக்க முடி யாமல் போனது. தேச விடுதலைக்காகக் கல்வியை யே துறந்துவிட்டு சிறைவாசம் அனுபவித்த சங்கரய் யாவின் அந்தத் தியாகமும் போராட்டமும் அதன் பிறகு எத்தனையோ சிறைகளை, தடைகளை எதிர்கொண்டேயிருந்தன. “உங்கள் வாழ்க்கை, போராட்டங்களால் நிறைந்தது. எதுக்காக இப்பிடி ஒரு வாழ்க்கை... பேசாம இதையெல்லாம் விட்டுட்டு நிம்மதியா போயிரலாம்னு எப்பவாவது தோணியிருக்கா?” என்று அவரிடம் ஒரு முறை கேட்டேன். ஒரு நொடி கூட தாமதிக்காமல் சட்டென்று அவரிடமிருந்து பதில் வந்தது. “அப்படியொரு சிந்தனை ஒருபோதும் வந்ததில்லை. நாம இன்னும் அதிகமாச் செயல்படணுமே, போராடணுமே... இந்தப் போராட் டம் பத்தலையேங்கிற குற்றவுணர்வுதான் எனக்கு வந்திருக்கு. உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கு நீங்க சொல்ற மாதிரி ஒரு நினைப்பு வரவே வராது.. சக மனுசனோட துன்பத்தைப் பத்தின நினைப்பும், அதுக்காக போராடணும்கிற தவிப்பும்தான் ஒரு கம்யூனிஸ்ட்டை உயிரோடவே வெச்சிருக்கு, அதைப் புரிஞ்சுக்கங்க..” என்று குரலுயர்த்தினார் தோழர் சங்கரய்யா. 

80 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவனாக, We are not job hunters... We are freedom hunters’ எனக் களத்தில் முழங்கிய ஒரு குரல் 102 வயதிலும் சுதி குறையாமல் இருந்ததன் ரகசியம் இதுதான். தோழர் என்.சங்கரய்யா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ‘சங்கரய்யாவின் சங்கநாதம்’ என்றுதான் அவரது பேச்சைக் குறிப்பிடுவார்கள். வெண்கலக் குரலில் அவர் பேசத் தொடங்கினால், அனல் பறக்கும். அவரது குரலைப் பற்றி மூத்த தோழர் ஒருவர், “சுதந்திரப் போராட்டக் காலத்துல தெருமுனைக் கூட்டங்கள்ல மைக் இல்லாமலே கத்திக் கத்தியே பேசிப் பழகிட்டாரு. மைக்லயும் அப்பிடியேதான் பேசுவார். அவரது கொள்கை முழக்க உரைகளைக் கேட்டா, நம் நரம்புகள் புடைக்கும். அவரது பேச்சைக் கேட்டுட்டுப் போய்ப் படுத்தா ராத்திரியெல்லாம் அவரோட குரல் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கும்...” என்றார். உண்மைதான்.... நூறு வயதில்கூட அந்த குரலின் அதிர்வு அப்படியேதான் இருந்தது. “ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடி மைப்படுத்துவதை, கீழ்மைப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அப்படியொரு அநீதி எங்கு நடந்தாலும், அதை எதிர்த்து நிற்கும் எவரும் கம்யூனிஸ்ட்டே” என்று சங்கரய்யா அடிக்கடி சொல்வார்.

இந்தச் சமூகத்தில் இருக்கும் வர்க்க, பொருளாதார, சாதிய வேற்றுமைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவற்றை மொத்தமாக அடித்து நொறுக்குவதற்கு கம்யூனிசம்தான் சிறந்த ஆயுதம் என்பதை இள மைப் பருவத்திலேயே நன்கு உணர்ந்தவர் சங்க ரய்யா. ஆகவேதான், ‘மார்க்சியமே மனித குலத்துக்கு வழிகாட்டும்’ என்ற தனது நிலைப்பாட்டில் தன் இறுதிமூச்சுவரை உறுதியாக இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பொறுப்புகளை தோழர் சங்க ரய்யா வகித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தான்  நேசிக்கும் கொள்கையில் தடம் மாறாமல், மானு டத்தை நேசிக்கும் மகத்தான தோழராகவே இருந்தார். வரலாற்றிலும் இருப்பார். சாதி மறுப்புத் திருமணங் களை அவர் பெரிதும் ஊக்குவித்தார். எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைத்த சங்கரய்யா, தனது குடும்பத்திலும் ஏராள மான சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி முன்னு தாரணமாக விளங்கினார். சாதி ஆணவப் படுகொ லைகளை அவர் கடுமையாகக் கண்டித்து வந்தார். எத்தனையோ அபத்தமான, ஆபத்தான அரசியல் ஆளுமைகள், ‘ஐகான்’களாகி இந்தத் தலை முறையின் முன்னால் பரவிக்கிடப்பதைப் பார்க்கும் போது, பயமாக இருக்கிறது. இனியொரு என்.எஸ் தோழர் எப்போது வருவார்..!

நன்றி: விகடன்.காம்