states

சாத்தானின் பிள்ளைகள் என்பதா?

சென்னை, ஆக.1- சிறுபான்மையினரை சாத்தானின் பிள்ளைகள் என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமானுக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க.உதயகுமார் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியினருக்கு செய்யப்பட்ட கொடூரங்களைக் கண்டிப்பதற்கு கூட்டம் என்ற பெயரில் தமிழ் நாடு கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரிக மாக தாக்கிப் பேசியிருக்கிறார் சீமான்.  இவர்களை “சாத்தானின் பிள்ளைகள்” என்றும், நாட்டில் நடந்த அநியாயங்களுக்கு எல்லாம் இவர்களே பொறுப்பு என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, பேட்டி ஒன்றில் அதை நியாயப்படுத்தி இருக்கிறார். சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தும், மக்கள் ஒற்றுமையை சிதைக்க முனையும் இந்தப் பேச்சு,  பேட்டியை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக அணிக்கு சிறுபான் மையோர் வாக்களிக்கிறார்கள் என்று இப்படி வன்மத்தையும் வெறுப்பையும் கக்கியிருக்கிறார் சீமான். அதைத் தனது பேச்சில்  வெளிப்படையாகக் கூறியிருக் கிறார். இந்தியாவில் மத நல்லிணக்கத்தை கெடுத்து, சிறுபான்மையோர் வாழ்வில் நிரந்தர அச்சத்தை உருவாக்கி வருவது ஆர்எஸ்எஸ், அதன் அரசியல் பிரிவான பாஜகவும் தான்.  பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும், அதன் மூலம் பாஜக அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் சீமானின் நோக்கமாகும் . இந்த சதி வேலைக்கு இணங்காமல் சிறு பான்மையோர் திமுக அணிக்கு வாக்களிப்பதே அவரின் ஆத்திரத் திற்கு காரணம். சீமான் இந்த  உள்ளடி வேலைக்கு இரையாக  வேண்டாம் என்று சிறுபான்மை யோர் மட்டுமல்ல, மனிதநேயர் கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.