states

மத வெறுப்புணர்வை விதைக்கும் ஆர்எஸ்எஸ் சாமியார்களுக்கு மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை,ஜூன் 8-  முஸ்லிம் வெறுப்புணர்வை விதை க்கும் ஆர்எஸ்எஸ்  சாமியார்களுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய துறவியர் மாநாட்டில் கலந்து  கொண்ட சில சாமியார்கள் தமிழ்நாட்டி லும் வடமாநிலங்கள் போல முஸ்லிம் வெறுப்புணர்வை விதைக்க முனைந் திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் விஷமப் பிரச்சாரத்தை இங்கும் நடத்து வதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. மன்னார்குடி ஜீயர் பேசுகையில் “முசல்மான்கள் தேசத் துரோகிகள்” என்று விஷம் கக்கியுள்ளார். இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளந்து நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைப்பது தான் தேசத் துரோகம்; அதைத்தான் இந்தத் திருக்கூட்டம் செய்கிறது. மதுரை ஆதீனமோ “துறவிகள் அர சியல் பேசுவோம்” என்று பிரகடனப் படுத்தியிருக்கிறார்.

ஆன்மீகம் பேச  வேண்டியவர்களை அரசியல் பேச வைப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் சதித்திட்டம். அதற்கு மதுரை ஆதீனம் இரையாகி யிருக்கிறார்.  “தமிழகத்தில் இந்துக்கள் மீது  தாக்குதல் நடக்கிறது” என்று ஒரு பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டி ருக்கிறார் விஎச்பி பொதுச்செயலாளர் மிலித் பிராண்டே. இங்கே இந்து- முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் அண்ணன்  தம்பிகளாய், மாமன் மச்சான்களாய்ப் பழகி வருகிறார்கள். இயற்கைப் பேரி டர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். இது  தொடரக் கூடாது எனும் சங்பரிவாரத்தின் நப்பாசையே இப்படி பொய்யாய், புனைகதையாய்வெளிப்படுகிறது. மதநல்லிணக்க மரபில் ஊறிய தமிழ்நாட்டில் பிற மத வன்மத்தை தூவி அரசியல் ஆதாயம் பெறப்பார்க்கிறது சங் பரிவாரக் கூட்டம். அதற்குத் துணை போகும் இந்தச் சாமியார்களின் விபரீதப் போக்கை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களின் சதி வேலைக்கு இரையாகி விடக் கூடாது என்று மக்கள் ஒற்றுமை மேடை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.