states

தேர்த் திருவிழாவில் பங்கேற்கக் கூடாது என்று அமைச்சர்களைத் தடுப்பதா?

சென்னை, ஜூன் 13- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கன்னியாகுமரியில் ஒரு தேர்த் திருவிழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் கலந்து கொண்டதை அந்த மாவட்ட பாஜக தலைவர்கள் எதிர்த்து தகராறு செய்திருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது அமைச்சர்களில் ஒருவர் வேற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதால் வடம்  பிடிக்கக் கூடாது என்று தகராறு செய்தி ருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற முறை யில் தங்களது சொந்த மத உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்து மத விழாவில் பங்கேற்றதைப் பாராட்டாமல், தங்களது பிற மத வெறுப்புணர்வை பாஜகவினர் காட்டியிருப்பது அவர்கள் எந்த அளவுக்கு மதநல்லிணக்க விரோதிகள் என்பதை நிரூபித்துள்ளது. இவர்களுக்கு இந்து மதத்தின் மீது அக்கறை இல்லை. மாறாக, இவர்களது நோக்கம் எல்லாம் மதப் பகைமையை ஊட்டி அரசியல் ஆதாயம் தேடுவதே என்பதை இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில நாட்கள் முன்பு இதே குமரி மாவட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

“இங்கே முன்பு போல மீண்டும் மதக்கலவரம் நடக்கும்” என்று மிரட்டல் விடுத்தார். அதற்கேற்ப அவரது கட்சியினர் தங்களது வேலைகளைச் செய்து வருவதாகத் தெரிகிறது. தமிழ்  நாடு அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, அத்தகைய கலவரம்  ஏதும் நடந்திடாதவாறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியத்திலும் மத மோதலை உருவாக்க சங் பரிவாரத்தினர் முயற்சித் துள்ளனர். அங்கு பிரசுரம் விநியோகம் செய்த கிறிஸ்தவர்கள் முகத்தில்  இந்து முன்னணியினர்  விபூதியை அள்ளி வீசி தகராறு செய்துள்ளனர்.  இந்திய குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் நமது  அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள் ளது. அதற்கு முரணாக பிற மதத்தவரின் பரப்புரையைத் தடுப்பது சட்ட விரோத மாகும். இப்படி நடந்து கொண்டவர்களை கண்டிக்கிறோம். அவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வடமாநிலங்களில் மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கும் வேலையில் பாஜக உள்ளிட்ட சங் பரிவாரம் இறங்கியிருப்பதையும், அதனால் உலக அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டிருப்பதையும் அறிவோம். அதே வேலையைத் தமிழ்நாட்டில் நடத்தவும் அந்தப் பரிவாரம் துணிந்திருக்கிறது. இது நமது மதநல்லிணக்க நல்மரபிற்கும், சுமூக வாழ்விற்கும் பெரும் கேடு விளை விக்கக் கூடியது என்பதை உணர்ந்து சங் பரிவாரத்தின் சதிகளை எதிர்த்து முறி யடிக்க முன்வருமாறு அனைத்து மனித நேயர்களையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.