states

20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்!

சென்னை,மே 10- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான செவ்வா யன்று (மே 10)  20 மசோதா்க்கல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஊராட்சிகள், தமிழ்நாடு உள்கட்ட மைப்பு மேம்பாட்டு திருத்தச் சட்ட முன்வடிவுகள், தமிழ்நாடு நீக்கறவுச்  சட்ட முன்வடிவு களை அமைச்சர்கள்  தாக்கல் செய்து உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், இக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர  குடிநீர் வழங்கல், தமிழ்நாடு பல்கலைக் கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கழிவு நீரகற்றல், அடுக்குக் குடியிருப்பு சொத்துரிமை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூன்று மற்றும் நான்காவது திருத்த சட்டம் உள்ளிட்ட 20 மசோதாக்கள் குரல்வாக்கெடுப்பு மூலம்  நிறைவேற்றப் பட்டது.