நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரிய விவாதம் இல்லாமல் பல்வேறு மசோ தாக்களை பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசு முன்மொழிந்து வருகிறது. அதுவும் இந்தி மொழியில் அதை திட்டமிட்டு செய்து வருகிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் ஆட்சேபிக்கிறது, வன்மையாக கண்டிக்கிறது. அண்மையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் இந்திய தண்டனைச் சட்டம், குற்ற வியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்று கள் சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாக்சியா சன்ஹிதா என்ற பெயர் களில் இந்தி திணிப்பை செய்யும் வகையில் மசோதா என முன் மொழிந்து நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. அதேபோல், மும்மொழி திட்டத்தை மீண்டும் அமலாக்கும் வகையிலும், 8 ஆவது அட்டவணை யில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளுக்கான அங்கீ காரத்தை பாஜக அரசு தொடர்ந்து தகர்க்கும் வகை யிலும், இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ப தற்கான வகையிலும் செயல்படுகிறது. இது கண் டிக்கத்தக்கது. ஆகஸ்ட் 4 அன்று முன்மொழிந்து சட்டமாக்கியது இந்தியா இதுவரை பின்பற்றி வரும் மொழிக் கொள்கை மற்றும் பண்பாட்டு நடைமுறை களுக்கு எதிரானதாகும். எனவே பாஜக ஆட்சியை வீழ்த்துவதன் மூலமும், பாஜக கட்சியையும் அதன் சித்தாந் தத்தையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே மாநில மொழிகள், பண்பாடு ஆகியவற்றை காப்பாற்ற முடியும். இதற்கு தமிழக ஜனநாயக சக்திகள் ஒன்று பட்டு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க முன் வர வேண்டும்.
சிபிஎம் மாநிலக் குழு தீர்மானம்