காஞ்சிபுரம், ஆக.30- பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 400 -வது நாளை எட்டி யுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை துவக்கியுள் ளன. இங்கு விமான நிலையம் அமைப்ப தால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங் கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.இதனால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதா ரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் என மக்கள் அஞ்சுகிறார்கள்.