மதுரை, அக்.31- தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டி யல் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங் கள் தர மறுத்த வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கியும் இருவரின் மனுவை தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சில சிறுவர் கள் தின்பண்டங்கள் வாங்கச் சென்றுள்ளனர். ஊர்க் கட்டுப்பாடு காரணமாக தின்பண்டம் வாங்க வரக் கூடாது. வீட்டில் போய் சொல்லுங்கள் எனக் கூறி கடைக்காரர் சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன், சுதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த னர்.
இதையடுத்து இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தனித் தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங் கோவன் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடை உரிமையாளரான மகேஸ்வரன் மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ராமச்சந்திரன், சுதா இருவர் மீதும் ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.