states

பாலஸ்தீனர்கள் தொடர் உண்ணாவிரதம்

பல்வேறு இஸ்ரேலிய சிறைச்சாலைகளில், ஆயிரம் பாலஸ்தீன கைதிகள் கடந்த ஆகஸ்ட் 17 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தை நடத்தி வருகின்றனர். சிறைகளுக்குள் இஸ்ரேலின் வன்முறைகளை எதிர்த்து, இப்போராட்டம் நடைபெறு கிறது.  நக்காப் என்ற இஸ்ரேலிய சிறையில் மட்டும் 1400 பாலஸ்தீனியர் உள்ளனர். இவர்களில் 75 கைதிகளை நப்பா என்ற இடத்திலே உள்ள சிறைச்சாலைக்கு மாற்றி னர். அங்கு அந்த 75 பேரும் பெரும் திரள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் முதல் வாரம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி யோர் இன்னமும் போராட்டத்தை தொடர்கின்றனர்.  இஸ்ரேலின் பல்வேறு சிலைகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர் உள்ளனர். இவர்களில் 1200 பேர் விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி நிர்வாக உத்தரவு மூலம் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக பென்  வீர் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றது  முதல் பாலஸ்தீன கைதிகள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படு கின்றன. இஸ்ரேலின் எம்பிக்கள் இக்கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை. பழைய ரொட்டிகளே கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. குளிப்பதற்கும் பல இடையூறுகள் உள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் எதிர்த்துப் போராடினால் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் அரசு முத்திரை குத்துகிறது.